இணையத்தள ஆசிரியரான டெஸ்மன்ட் சதுரங்க டி அல்விஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர் கைதானதாகவும், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காகவே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லங்காநியுஸ்வெப் என்ற இணையத்தள ஆசிரியராக இவர் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal