நாங்கள் இனிமேல் மூன்று பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. நாங்கள் மூன்று பேர்! என்று விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal