நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா

கொரோனா வைரஸ் பிரச்சனையால் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகருக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக கூறியிருப்பதுடன், கொரோனாவை போகுமாறு தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புகள் இல்லாததால் இருவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.