பெற்ற மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய பெற்றோர்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த பெற்றோர் தாங்கள் பெற்ற மகளை கடந்த 15 வருடங்களாக பாலியல் ரீதியில் துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணின் தந்தை கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொடூரமாக துன்புறுத்தியதாகவும் சிட்னி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த பெண்ணை மூன்று நாட்களாக பிளாஸ்டிக் பெட்டியில் பூட்டி ஷெட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

பெண்ணின் பெற்றோர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. 59 வயதுடைய தந்தைக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் 36 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு பரோலில் வெளிவர தகுதி உடையவர் ஆவார்.

51 வயது மதிக்கத்தக்க பெண்ணின் தாய்க்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும். பெண்ணின் 5 வயது முதல் அவரது தந்தை பல கொடுமைகளை செய்துவந்துள்ளார். தண்ணீரில் முகத்தை அழுத்துவது, வயரால் கழுத்தை நெறிப்பது, காரமான மிளகாய்களை சாப்பிட செய்வது என பல முறைகளில் துன்புறுத்தியுள்ளார். பெண்ணின் 8 வயது முதல் பாலியல் ரீதியாக உணர்வுகளை தந்தைக்கு எப்படி தூண்ட வேண்டும் என்று அவரது தாய் சொல்லிக்கொடுத்துள்ளார்.
தந்தையின் மேல் 73 குற்றங்களும், தாயின் மீது 13 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதனை கொடுமையின் உச்சம் என வர்ணித்த நீதிபதிகள் பெண்ணின் தந்தையை வக்கிரம் குணம் படைத்தவன் என்று கூறியுள்ளனர்.

தற்போது 24 வயதாகும் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2011ம் ஆண்டு தன் பெற்றோர் மீது புகார் தெரிவித்தார். 2013ஆம் ஆண்டு காவல்துறையினர் பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர்.