யாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் மீட்பு ! இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியவேளை மனித எச்சங்கள் வெளிவந்துள்ளன. 2006 ம் ஆண்டுக்கு முன்னர் குறிப்பிட்ட பகுதியில் படையினர் நிலைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.