பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமாம்

தேர்தலில் வெற்றிபெற்றால் கிழக்கு மாகாண  அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுதியளித்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.<br />
தற்போது சிறையில் உள்ள பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

பிள்ளையான் தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வாக்குறுதியளித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானால் மாத்திரமே அமைச்சர் பதவியை வழங்கமுடியும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடாபில் பிள்ளையான் தற்போது சிறையில் உள்ளார்.

பிள்ளையானை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதன் மூலம் அவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவரின் சகா ஒருவர் தெரிவித்தார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.