மாணவர்கள் படுகொலை! யாழ் மாவட்ட செயலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ் மாவட்ட செயலகம்  முன்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்துகின்றனர்.

அதேநேரம் மாணவர்களால் மாவட்ட செயலகத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுவதால் அரச செயலக ஊழியர்கள் அரச கட்டடத்திற்குள் செல்ல முடியாது வெளியே காத்திருக்கின்றனர். இதனால் அரச செயலத்தின் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் மாணவர்கள் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் ஐவரையும் இன்று விசாரணைக்காக நீதி மன்றம் முன்நிறுத்துவற்கு ஏற்பாடுகள் செய்யட்ட நிலையில் மாணவர்களின் போராடங்கள் மற்றும் கதவடைப்புப் போராட்டங்கள் காரணத்தின் அச்சம் காரணமாக குறித்த காவல்துறையினரை கிளிநொச்சி நீதி மன்றில் முன்னிறுத்தவதவுள்ளதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

u1 u2 u3 u5 u6 u7 u8 u9 u7 u8 u9 u10