நியூசிலாந்திலிருந்து 88 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

கொரோனா நெருக்கடி காரணமாக நியூசிலாந்தில் சிக்கித்தவித்த 88 இலங்கையர்கள் நேற்று(25) பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

நியூசிலாந்தின் வெலிங்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த குறித்த பயணிகள் சில்க் ;எயாரின் விசேட விமானம் மூலம் நேற்று  மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.