கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – விசாரிக்க இடைக்கால தடை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவிற்கு எதிரான விசாரணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கொழும்பு உயர்நீதிமன்றம் டிரையல் அட் பார் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின்னரே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.