முக்கிய அரசியல்வாதிகளை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 18 பேருக்கு எதிர்வரும் எதிர்வரும் புதன்கிழமை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவன்ட்காட் நிறுவனம் தன்னிச்சையாக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதாகவும், அதனால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து அவன்ட்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இவர்களுக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் 5 பேர் தவிர முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன , முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கமிலத் , முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க , குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர , காவல் துறை பரிசோதகர் அலுத்கே செனரத் , உதவி காவல் துறை அதிகாரி லசந்த ரத்நாயக்க , உதவி காவல் துறை அத்தியட்சகர் லசந்த ரத்னாயக்க , வசந்த நவரத்ன பண்டார , ஓய்வு பெற்ற பிரதி காவல் துறை மா அதிபர் எஸ்.ஏ.டீ.குணவர்தன, லெப்டினன் கமான்டர் டபிள்யு.எச்.பி.வீரசிங்க , ரியர் அத்மிரல் நிலந்த ஹீனட்டிகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய , காலி துறைமுக காவல் துறை நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி காவல் துறை பரிசோதகர் இந்துகத சில்வா , அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார உள்ளிட்டவர்களுக்கும் இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.