உலகின் முதல் தொங்கும் ரெயில் சேவை

மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல், தொழில் நுட்பத்திலும், சீனா சிறந்து விளங்கி வருகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவை பொறுத்தவரையில், ரயில்கள் அதிக அளவு இயக்கப்படுகிறது. அதிவேக ரெயில் சேவையிலும், சீனா முதல் இடம் வகிக்கிறது.

சீனாவின் முதலாவது தொங்கும் ரெயிலின் சோதனை ஓட்டம், வெற்றியளித்துள்ளதாக சீன தொழிற்நுட்ப துறையினர் அறிவித்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில், இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

லித்தினியம் பேட்டரி மின்சக்தியில் இயங்கும் இந்த ரெயில், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 300 கிலோ மீட்டர் ரெயில் பாதையில், இந்த ரெயிலின் சோதனை ஒட்டம் வெற்றிகரமான நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயிலில் 120 பயணிகள் பயணிக்க முடியும் என இந்த திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரான ஜியாடெங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாய் வான்மிங் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ மீட்டர் சுரங்க ரெயில் பாதை அமைக்க செலவாகும் தொகையை விட 5-ல் ஒரு வீதமே, தொங்கு ரயில் பாதையை அமைக்க செலவாகும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் லித்தினியம் பேட்டரிகள் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ரெயில் பாதையின் நீளத்தை, மேலும் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு, விரிவாக்க உள்ளதாகவும் பின்னர், 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, இந்த ரயில் பாதை விரிவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற ரெயில்கள், மக்களுக்கு மிகுந்த பயனளிப்பது மட்டும் இல்லாமல் விரைவாக செயல்படும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார்கள். சீனா போலவே மற்ற நாடுகளும் இது போன்ற ரெயில் சேவையை கொண்டுவர வேண்டும் என்பது தான் மற்ற நாடுகளில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!!…