தமிழர்களுக்கு மிரட்ட விடுத்த பிரியங்க பெர்ணாண்டோவிற்கும் பதவி உயர்வு!

பிரித்தானியாவிற்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவேளை கொலைமிரட்டல் சமிக்ஞைவிடுத்ததன் காரணமாக சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மேஜர் ஜெனரல் தர அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பிரியங்க பெர்ணாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதை இராணுவ ஊடக பிரிவு உறுதி செய்துள்ளது.

பிரியங்க பெர்ணான்டோ உட்பட ஐவர் மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.2018 ம் ஆண்டு பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் சுதந்திர கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பிரியங்க பெர்ணான்டோ மரண அச்சுறுத்தல் சமிக்ஞை செய்தமை காணொளி மூலம் வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டமை குறிப்பிடத்க்கது.

இதனை தொடர்ந்து இது தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெற்றன.