போர் கதையில் நடிக்க அதர்வா ஆசை

வாரிசு நடிகராக இருப்பதில் நல்லது, கெட்டது என இரண்டும் உள்ளது என்கிறார் நடிகர் அதர்வா.

ஒருவர் இன்னாரின் மகன் என்று அடையாளம் காட்டப்படும்போது எளிதாக ரசிகர்களைச் சென்றடைய முடிகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு எப்போதுமே அப்பாதான் முதன்மை நாயகன். அவரது நற்பெயரை நாமும் பெறுவது என்பது மிகப்பெரிய சவால். அதை சாதித்துக் காட்டுவது சுலபமல்ல. அப்பா காதல் நாயகனாகப் பேசப்பட்டார் எனில் எனக்கு காதல் கதைகளுடன் சவால் மிகுந்த கதாபாத்திரங்களும் பிடித்தமானவை. குறிப்பாக விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைகள் ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு கதைதான் ‘ஈட்டி’. அது எனக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பிடித்த படம்,” என்று கூறும் அதர்வாவுக்கு போர் சம்பந்தப்பட்ட கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். தற்போது அவர் நடிப்பில் 3 படங்கள் உருவாகி வருகின்றன.