அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் எங்கே?

கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 165 பேர், சிறிலங்கா  விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், பங்களாதேஷூக்கு அனுப்பி வைப்பதற்காக, நேற்று (08) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா-மெல்பன் நகரிலிருந்து யு.எல் 605 என்ற விமானமே  கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.

அவுஸ்திரேலியா- மெல்பன் நகரிலிருந்து பங்களாதேஷ் டாக்கா நகருக்கு சர்வதேச விமான போக்குவரத்து மார்க்கம் இல்லாததால், இந்த பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு அழைத்துவரப்பட்டு இங்கிருந்து பங்களாதேஷ் நோக்கி சிறிலங்கா விமான சேவைக்குரிய விசேட  விமானம் மூலம் சென்றுள்ளனர்.