விஜய் சேதுபதி மீது புகார்

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் மீது திருச்சி மாநகர காவல் துறை  கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘‘நடிகர் விஜய்சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.