முள்ளியவளையில் மிதிவெடிகள் மீட்பு

முள்ளியவளை, 03 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது, போர் காலப்பகுதியில் நிலத்தில் புதையுண்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மிதிவெடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் மிதிவெடிகளை அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.