மூளைச்சாவு அடைந்துவிட்டாரா வடகொரிய அதிபர் கிம்?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சைக்குப்பின் உணர்வற்று, மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்கு மருத்து ஆலோசனை வழங்க மருத்துவ வல்லுநர்கள் குழுவை சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

அதேசமயம், கடந்த வாரத்திலிருந்து அதிபர் கிம் ஜாங் ஓய்வெடுக்கும் வோன்சான் நகரில் உள்ள மாளிகை வளாகத்தில் அவர் பயன்படுத்தும் பிரத்யேக ரயில் தயாராக இருப்பதாக ெசயற்கக்கைக்கோள் புகைப்படம் தெரிவிக்கிறது. அதிபர் கிம் உடல்நிலை குறித்து தொடர்ந்து ஆதாரமற்ற செய்திகள் வருவதால் எதையும் உறுதி செய்யமுடியவில்லை.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்துள்ளா்.

சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி கடந்த இரு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப், “ அதிபர் கிம் உடல்நலம் தேற வாழ்த்துக்கள் “ என மட்டும் தெரிவித்திருந்தார்

40 வயதுக்குள் இருக்கும் அதிபர் கிம்முக்கு அதீதமான புைகப்பழக்கம், உடல் பருவமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் கிம்மின்உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் சேனல் செய்தி வெளியி்ட்டது.

இந்த செய்தியின் அடிப்படையில் அதிபர் கிம் உடல்நலம் ேதற வாழ்த்துத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், பின்னர் கிம் தொடர்பான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று தெரிவித்தார்.

வடகொரியா தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடு. அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப்பின்புதான் வெளியாகும். இதனால்தான் அதிபர் கிம் உடல்நிலை குறித்த எந்ததகவலும் வெளிஉலகிற்கு தெரியாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.