ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி – திணறும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தற்போதைய நிலவரப்படி, 29 லட்சத்து 20 ஆயிரத்து 738 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசின்  தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை
அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 9 லட்சத்து 60 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 35 ஆயிரத்து 419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.