கொவிட் 19 அச்சுறுத்தலை வெகு விரைவில் வெற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு

கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தலை வெகு விரைவில் வெற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதும் கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த வேவையான அனைத்து விஞ்ஞான ரீதியான செயற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய நிலையிலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதால் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பினபற்ற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.