கொழும்பில் கொரோனா தொற்றாளர் அடையாளம் !

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றிரவு ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று அடையாளம் காணப்பட்ட ஐவரில் நால்வர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்களென்றும் நால்வரில் ஒருவரே இவ்வாறு கொழும்பில் அடையாளம் காணப்பட்டாரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.  குறித்த பெண் இந்தியா சென்று திரும்பியிருந்தவரென தெரிவிக்கப்படுகிறது .

இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையின் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பகுதியில் வசிக்கும் சிலரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.