ஊரடங்கை மீறினாரா பார்வதி

தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி ஊரடங்கை மீறியதாக கூறப்படுகிறது.

தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி, கடந்த செவ்வாய்கிழமை தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் அவர் காரில் ஊர் சுற்றிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதில் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாறு அதாறு பாடலுக்கு அவரும், அவரது நண்பர்களும் காருக்குள்ளேயே நடனமாடுகின்றனர். போதிய சமூக இடைவெளியையும் அவர்கள் பின்பற்றவில்லை. நடிகை பார்வதியின் இந்த செயல் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
ஆனால், இந்த வீடியோ 2 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது குறித்து பார்வதி எந்த பதிலும் தரவில்லை.