உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு சியோன் தேவாலத்தில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டை கொண்டுச் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறை  ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.