கொரோனா ஒழிப்புக்கு பட்டதாரிகள் இணைப்பு

வேலையற்ற பட்டதாரி பயிற்றியாளர்களை கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்துக்கு தற்காலிகமாக இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்மைய அரச நிர்வாகம்  உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அத்துடன், பட்டதாரி பயிற்றியாளர்கள் அனைவரும் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.