ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரம் நீட்டிப்பு!

கொழும்பு, கம்பஹா, புத்தளம், வட மாகாணத்துக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் ​நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மாவட்டங்களில் இன்று பகல் 12 மணிவரை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.