தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, ஒருவரை காதலித்ததாகவும், சூழ்நிலை காரணமாக அவரை பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவரை பற்றி பல்வேறு திருமண வதந்திகள் பரவி வந்தன. அவற்றை அவர் மறுத்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுஷ்கா, ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: “நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை.

அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்லி இருப்பேன். இப்போதும் அந்த காதலுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். எனக்கு பிரபாசை 15 வருடங்களாக தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதாலும், படத்தில் ஜோடியாக நடித்ததாலும் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை”. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
Eelamurasu Australia Online News Portal