ஆர்யாவை திருமணம் செய்து ஓராண்டு ஆன நிலையில், அவருக்காக உருகி ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருக்கிறார் சாயிஷா.
கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யாவுடன், சாயிஷா இணைந்து நடித்தார். அப்போது இருவரும் காதலிக்கத் துவங்கினர். சில காலத்துக்குப் பின், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 10ல், ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக தங்களுடைய திருமண விழாவை நடத்தினர்.
அதில் திரையுலகம் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இருவரும் அதை கொண்டாடி வருகின்றனர். இருவரது புகைப்படங்களையும் வெளியிட்டு, நடிகை சாயிஷா திருமண நாளுக்காக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: முடிந்த வரை அனுசரித்து கொண்டு எல்லா வழிகளிலும் என்னோடு இணைந்து ஒராண்டை சிறப்பாக கடந்த ஆர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை இனி என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அன்பு, பாசம், அரவணைப்பு, நிலைத்த தன்மை, தோழமை எல்லாமே ஒரே நேரத்தில் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இப்போது மட்டுமல்ல, என்றுமே, உங்களை நேசிப்பேன்; காதலிப்பேன் என உருகி இருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal