சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு!

சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

சமந்தா நடித்துள்ள ஜானு தெலுங்கு படம் வசூலை குவிக்கவில்லை என்றாலும் பாராட்டை பெற்று கொடுத்துள்ளது. அடுத்து அவர் தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ’நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் கண்ணாடி அணிந்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பேன்.
கண்டிப்பாக பணம் சம்பாதிக்கும் முயற்சியில்தான் இருப்பேன். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு. வைர நகைகள் மிகவும் பிடிக்கும். அதை அணியும்போது அழகாக இருக்கிறேன் என்று பாராட்டுகிறார்கள்.
சமந்தா
எனக்கு பிடித்த சுற்றுலா தளம் புளோரிடாவில் இருக்கும் மியாமி. அமெரிக்க வெப் தொடர்கள் அதிகம் பார்ப்பேன். நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பிடிக்கும். நகைச்சுவை இருந்தால்தான் சிரித்து சந்தோஷமாக இருக்க முடியும்’. இவ்வாறு அவர் கூறினார்.