வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை!

குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாமை தொடர்பில், அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு, இன்று (24) நான்காவது முறையாகவும் அழைப்பாணை அனுப்புமாறு, மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

2008 – 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், கொழும்பில் சன நெரிசல்மிக்க பகுதிகளிலிருந்து 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கியமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 14ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட, நேற்றைய தினமும் நீதிமன்றத்தில் ஆஜரா​கி இருக்கவில்லை. இந்நிலையிலேயே, நீதிபதிகள் குழு, மேற்கண்ட உத்தரவைப் ​பிறப்பித்தது.