சிங்கப்பூரில் புதிதாக மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று!

சிங்கப்பூரில் புதிதாக மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் Grace Assembly of God தேவாலயத்துடன் தொடர்புகொண்டவர்கள். மூன்றாமவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்.புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்தவர்.

அந்த மூவரையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆனது. இந்நிலையில், COVID-19 கிருமியால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு குணமாகியுள்ளார்.

அவருடன் இதுவரை மொத்தம் 19 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.