தமிழர் விளையாட்டு விழா 2020 – சிட்னி

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நடத்தப்படும் தமிழர் ஒன்றுகூடலும் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் நினைவாக நடத்தப்படும் விளையாட்டு விழா நிகழ்வும் 26 – 01 – 2020 அன்று துங்காபி பினாலொங் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

காலை எட்டு மணிக்கு கிரிக்கற் மற்றும் காற்பந்தாட்டம் ஆகிய போட்டிகளுடன் ஆரம்பமான விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான போட்டிகள் மதியம் ஒரு மணி தொடக்கம் நடைபெற்றன. சாக்கோட்டம் தேசிக்காயும் கரண்டியும் ஓட்டம் தவளைப்பாய்ச்சல் பழம்பொறுக்குதல் போன்ற சிறுவர்களுக்கான போட்டிகளும் பெரியவர்களுக்கான ஓட்டப்போட்டி பின்னால் ஓடும் போட்டி என்பனவும்நடைபெற்றன.

மாலையில் கரப்பந்தாட்டம் கிளித்தட்டு கயிறு இழுத்தல் தலையாணிச்சண்டை பொன்ற போட்டிகளும் நடைபெற்றன.

இவ்விளையாட்டு போட்டிகளில் கரப்பந்தாட்டத்தில் Trinco Boys A அணி வெற்றியாளருக்கான விருதை பெற்றதுடன் Trinco Boys B அணி இரண்டாவது நிலையை பெற்றது.

உதைபந்தாட்ட போட்டியில் Unites national Football Club அணி வெற்றியாளருக்கான விருதை பெற்றதுடன் கரிகாலன் A அணி இரண்டாவது நிலையை பெற்றது.

கிரிக்கற் விளையாட்டு போட்டியில் All Stars அணி வெற்றியாளருக்கான விருதை பெற்றதுடன் Hill Strikers அணி இரண்டாவது நிலையை பெற்றது.

வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு மாலை ஆறு மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.