வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படம், தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர இருக்கிறது. இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி
அதன்பிறகு படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ‘‘கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே…?’’ என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் நடிக்கிறேன்’’ என்று பதில் அளித்தார்.