அவுஸ்­தி­ரே­லிய காட்டுத் தீ- 10,000 ஒட்­ட­கங்­களை கொல்­வ­தற்கு உத்­த­ரவு!

அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிலவும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக காட்டுத் தீ வேக­மாகப் பரவி வரு­கின்ற நிலையில் முழு நாடுமே திண்­டாட்­டத்தை எதிர்­கொண்­டுள்ளது.

இந்­நி­லையில்  அந்­நாட்­டி­லுள்ள ஒட்­ட­கங்கள் வரட்­சியால் பாதிக்கப்­பட்ட பிராந்­தி­யங்­களில் அதி­க­ளவு நீரை அருந்­து­வதைத் தடுத்து நிறுத்த அங்­குள்ள 10,000 க்கு மேற்­பட்ட ஒட்­ட­கங்­களைக் கொல்லும் நட­வ­டி­க்கை இன்று புதன்­கி­ழமை முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அனன்கு பிட்­ஜன்ட்­ஜட்­ஜாரா யன்­கு­னிட்­ஜட்­ஜாரா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த உள்ளூர் தலை­வர்கள் ஒட்­ட­கங்­களைக் கொல்­வ­தற்­கான இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்னர்.

இதற்­காக உலங்­கு­வா­னூர்­தி­களில்  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  துப்­பாக்கிச் சூட்டை நடத்­து­ப­வர்களை அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒட்டகங்களைக் கொல்லும் இந்த நடவ டிக்கை சுமார் 5 தினங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.