அவுஸ்­தி­ரே­லி­யாவில் மழை பெய்தபோதும் பாரிய காட்டுத் தீ அச்­சு­றுத்தல்!

அவுஸ்­தி­ரே­லி­யாவில் காட்டுத் தீ பரவி வரும் பிராந்­தி­யங்­களில்  நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்­கி­ழமை பருவ கால மழை­வீழ்ச்சி இடம்­பெற்­றதால் அந்தப் பிராந்­தி­யங்­க­ளி­லான வெப்­ப­நிலை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

சிட்னி நகர் முதல் மெல்போர்ன் நகர் வரை­யான கிழக்குக் கடற்­கரை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிராந்­தி­யத்தின் சில பகு­திகள் என்­ப­னவற்­றி­லேயே மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. எனினும் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழ­மைக்குள் வெப்­ப­நிலை மீண் டும் அதி­க­ள­வுக்கு அதி­க­ரிக்கும் அபாயம் உள்­ள­தாக எச்­ச­ரிக்­கப்­ பட்­டுள்­ளது.

இதன் பிர­காரம் விக்­டோ­ரியா மற்றும் சவுத் வேல் ஸில் மேலும் பாரிய காட்டுத் தீ ஏற்­பட்டுப் பர­வலாம் என எதிர்­வு­கூ­றப்­ப­டு­கி­றது. அத்­துடன் மேற்­படி காட்டுத் தீயால் ஏற்­பட்ட வளிமண்டல மாசாக்கம் காரணமாக பெருந்தொகையான மக் கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.