இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள பூஜித்த, ஹேமசிறி!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை  மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

கடந்த நீதிமன்ற விசாரணையின்போது கொழும்பு மேலதிக நீதிவான் இவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

21/4 உயிர்த்த ஞாயிறு  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்காமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.