2019 – சர்வதேச போக்குகள்!

2019ஆம் ஆண்டின் இறுதி நாளான மார்­கழி 31ஆம் திகதி ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்தில் அமைந்­துள்ள உல­கி­லேயே மிகப்பெரிய அமெரிக்க தூத­ரா­லயம் ஈராக்­கிய மக்­களின் பலத்த தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. 2003இல் அமெரிக்கா ஈராக்­கினுள் புகுந்து 16 ஆண்­டுகள் கழிந்த நிலை­யிலும் அமெரிக்­காவின் ஈராக்­கிய கொள்­கைக்கு பலத்த எதிர்ப்பு ஈராக்கில் இன்னும் இருப்­பதை தாக்­குதல் சம்­பவம் எடுத்துக் காட்­டு­கி­றது. ஈராக்­கிய அர­சாங்கம் இரண்டு நாடு­களில் தங்­கி­யுள்­ளது. வேடிக்கை என்­ன­வென்றால் அமெரிக்கா பரம வைரி­யாக கருதும் ஈரான் ஈராக்­கினுள் செல்­வாக்­குடன் திக­ழு­கி­றது. ஒரு­புறம் ஈராக்கை பணிய வைப்­ப­தற்கு அமெரிக்­காவின் பொரு­ளா­தார தடை மறு­புறம் ஈராக்­கினுள் ஈரானின் செல்­வாக்கை மழுங்­க­டிக்கச் செய்­வ­தற்­கான முயற்­சியில் அமெரிக்கா இறங்­கி­யுள்­ளது.

ஈராக்­கினுள் அமெரிக்க பாரிய கட்­டு­மாண பணி­களை நிறை­வேற்றும் ஒரு ஒப்­பந்­த­தாரர் ஈரா­னிய ஆத­ரவு சியா படைப்­பி­ரி­வி­னரால் கொல்­லப்­பட்­ட­தாக குற்­றஞ்­சாட்டி அமெரிக்கா ஈராக்­கினுள் குண்டு வீசி தாக்­கு­தலை நடத்தி இரு­ப­துக்கு மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். அமெரிக்­காவின் மூர்க்­கத்­த­ன­மான குண்டு வீச்­சுக்கு பதி­லடி கொடுக்கும் முக­மா­கவே ஈராக்கில் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் அமைந்­துள்ள அமெரிக்க தூத­ரகம் தாக்­கப்­பட்­டுள்­ளது. ஈராக்­கினுள் அமெரிக்கா கடைப்­பி­டித்த கொள்கை தோல்­வியை கண்­டுள்­ளது. இன்­றைய நிலையில் மிகவும் ஆபத்­தான யுத்­தங்­களை உரு­வாக்கக் கூடிய சூழல் ஈரான் அமெரிக்க முரண்­பாட்­டி­னாலும் வட­கொ­ரியா அமெரிக்கா முரண்­பாட்­டி­னாலும் காணப்­ப­டு­வ­தாக துணிந்து கூறலாம். ஈரா­னுக்­கெ­தி­ரான பொரு­ளா­தார தடை அமெரிக்­காவின் ஒரு­த­லை­பட்­ச­மான நட­வ­டிக்கை என்­பதும் சில ஐரோப்­பிய நாடுகள் கூட ஈரான் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை என்­பதும் சம­கால நிகழ்­வு­களை அல­சு­ப­வர்­க­ளுக்கு புரியும். வட­கொ­ரிய அதிபர், அமெரிக்க அதிபர் ட்ரம்­முக்கு கிறிஸ்மஸ் பரிசு ஒன்று தரு­வ­தாக அச்­சு­றுத்­தி­யுள்ளார். புதிய ஒரு ஏவு­கணை ஒன்றை பரீட்­சிக்க இருப்­ப­தாக வட­கொ­ரிய அதிபர் தெரிவித்­த­மையே கிறிஸ்மஸ் பரி­சாகும். அமெரிக்க அதி­பரும் வட­கொ­ரிய அதி­பரும் சிங்­கப்­பூரில் வட­கொ­ரியா தென்­கொ­ரிய எல்­லையின் வியட்­னாமில் சந்­தித்து மூன்று தட­வைகள் பேச்­சு­வர்த்தை நடத்தி இருந்­தனர். இதனால் கொரிய பிராந்­தி­யத்தில் யுத்தம் மூழு­வது தவிர்க்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அமெரிக்கா வட­கொ­ரி­யா­வுக்­கெ­தி­ரான பொரு­ளா­தார தடை­களை இன்னும் தளர்த்­தாத நிலையில் வட­கொ­ரிய அதிபர் அச்­சு­றுத்­தல்­களை விடுத்த வண்ணம் உள்ளார். வட­கொ­ரிய அதி­பரின் அச்­சு­றுத்தல் பற்றி ஜனா­தி­பதி ட்ரம்­மிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­களை எழுப்­பிய போது அதிபர் ட்ரம் தமக்கே உரிய பாணியில் பதி­ல­ளித்தார். வட­கொ­ரிய அதிபர் மிகவும் நேர்மையா­னவர் நெருங்­கிய நண்பர் எமக்கு கொடுத்த வாக்­கு­களை அவர் மீற மாட்­டார் என நம்­பு­கிறேன் என கூறினார். கிளப்­ப­ப்ப­டு­கின்­றது.

சோபா எனப்­படும் ஒப்­பந்தம் இலங்கை, அமெரிக்க நாடு­க­ளுக்­கு­மி­டையில் கைசாத்­தி­டப்­பட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இந்த ஒப்­பந்­தத்தை தமிழில் விரி­வாக கூறினால் படை­யி­னரின் அந்­தஸ்து பற்­றிய ஒப்­பந்தம் எனக் கூறலாம். இந்த ஒப்­பந்­தத்­திற்கு  தற்­போ­தய அர­சாங்கம் ஆத­ர­வினைக் காட்­ட­வில்லை. அமெரிக்க பணி­யா­ளர்கள்

இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும். காலப்­ப­கு­திக்குள் எந்­த­வி­த­மான வரி­க­ளையும் செலுத்த தேவை­யில்லை. சுங்க தீர்வை வரிகள் அல்­லது வேறு­வ­கை­யான நாட்டைப் பாது­காக்கும் வரி  பெறு­மதி சேர்க்கும் வரி என கூறப்­படும் துறை­முக விமான நிலை­ய வரி போன்­ற­வற்­றையும் செலுத்த தேவை­யில்லை அமெரிக்க பணி­யா­ளர்­களின் பொதிகள், வாக­னங்கள் எந்­த­வி­த­மான பரி­சோ­தனைக்கும் உட்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது. கப்­பல்கள், வாக­னங்கள் இலங்­கைக்குள் வரலாம், போகலாம். அமெரிக்க கப்­பல்கள், விமா­னங்கள் இலங்­கைக்குள் பிர­வே­சிக்கும் போது இறங்கு கட்­ட­ணங்கள் அல்­லது வேறு வரிகள் செலுத்த தேவை­யில்லை. கப்­பல்­களும் விமா­னங்­களும் இலங்கை தரப்­பினால் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது.

இந்த இரா­ணுவ, சிவி­லியன் பணி­யா­ளர்கள் அமெரிக்க பாது­காப்பு அமைச்சின் கீழ் பணி­யாற்­று­கி­றார்கள். அவர்­க­ளுடன் அமெரிக்க பாது­காப்பு அமைச்சு சில தனி­யார் ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து சேவை­களைப் பெறும் சூழ்­நி­லை­களில் ஒப்­பந்தம் அவர்­க­ளையும் உள்­ள­டக்­கு­கி­றது. இந்த மூன்று தரப்­பி­னரும் இரா­ணுவ பணி­யா­ளர்கள் சிவி­லியன் பணி­யா­ளர்கள் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் இலங்­கையில் வருகை தரு­வ­தற்கு தங்­கி­யி­ருப்­ப­தற்கும் ஒப்­பந்தம் வகை செய்­கி­றது. கடல்­மார்க்கம், விமா­ன­மார்க்­க­மாக வருகை தருதல் பயிற்­சிகள், ஒத்­தி­கைகள், மனி­தா­பி­மான செயற்­பா­டுகள், இரு­த­ரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்ட வேறு விட­யங்­களும் ஒப்­பந்­தத்தில் இடம் பெறலாம். தற்­போ­தய தக­வல்­களின் பிர­காரம் அமெரிக்க பணி­யா­ளர்­க­ளுக்கு இரா­ஜ­தந்­தி­ரி­கட்கு உரித்­தான விடு­பாட்டு உரி­மைகள், சிறப்­பு­ரி­மைகள் வழங்­கப்­படும் எனத் தெரிகி­றது. அமெரிக்க பணி­யா­ளர்கள் அமெரிக்க அடை­யாள இலச்­சி­னை­யுடன் இலங்­கைக்குள் வரலாம். வெளியே­றலாம். அமெரிக்க அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்கள் அதா­வது  சாரதி உரி­மை­ப்பத்­திரம் போன்­றவை இலங்­கையில் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். இன்­றைய சர்­வ­தே­ச­சூ­ழலில் இலங்கை அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­வ­தாக தெரி­கி­றது.

அமெரிக்கா எனும் ஏக வல்­ல­ரசின் அதிபர் டொனால்ட் ட்ரம் தற்­போது பொரு­ளா­தார தடை­களை ஈரா­னுக்­கெ­தி­ராக மேலும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரிவித்­துள்ளார். குறிப்­பாக அயோத்­துல்லா கம­னியை இலக்­கு­வைப்­ப­தாக தெரிவித்­துள்ளார். இம் மிரட்­டல்­க­ளுக்கு ஈரான் அர­சாங்­கத்தின் எதிர்­வி­னைகள் எவ்­வாறு காணப்­ப­டு­கி­றது என்­பதை அறி­யாமல் இவ்­வி­ட­யத்தின் பரி­மா­ணங்­களை அறிய முடி­யாது ஈரானின் எண்ணெய் ஏற்­று­ம­திகள் தடை செய்யும் நட­வ­டிக்­கையை அமெரிக்­காவின் பொரு­ளா­தார யுத்தம் என ஈரான் பேச்­சாளர் கூறு­கிறார். அமெரிக்க அதி­பரின் அறி­விப்­புகள் முட்­டாள்­த­ன­மா­னவை என்னும் கடந்த 40 வரு­டங்­க­ளாக அமெரிக்கா ஈரான் மேல் எந்த தடையை விதிக்­க­வில்லை, இனிமேல் புதி­தாக பிறப்­பிப்­ப­தற்கு எந்த தடை உள்­ளது. எனவும் இத்­த­டை­களால் அமெரிக்கா அடைந்த பெரு­மைகள் எவை எனவும் அயோத்­துல்லா காமெனி மீது புதி­தாக தடை விதிப்­பதன் மூலம் அவ­ருக்கு எந்த வித­மான சங்­க­டங்­களும் ஏற்­படப் போவ­தில்லை எனவும் அயோத்­துல்லா கமனி அமெரிக்­கா­விற்கு பயணம் செய்­வ­து­மில்லை எனவும் நடை­மு­றையில் இத்­த­டைக்கு ஈரான் அடங்­கப்­போ­வ­தில்லை எனவும் பேச்­சாளர் கூறி­யுள்­ளனர். அமெரிக்க அதிபர் புதிய பொரு­ளா­தார தடை­களை அறி­வித்­ததால் ஈரா­னு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்­கான கத­வு­களை அடித்து மூடி­யுள்ளார் எனவும் தெரிவித்­துள்ளார்.

2019ஆம் ஆண்டின் அர­சியல், பொரு­ளா­தார விவ­கா­ரங்­களை அலசும் போது ஐக்­கிய அமெ­ரிக்க நாடு­களின் பிர­ப­ல­மான ஜனா­தி­ப­திக்­கெ­தி­ரான குற்­ற­வியல் பிரே­ரணை பிர­தான பேசு­பொருள் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை. அமெ­ரிக்க பாரா­ளு­மன்றம் இரு­ச­பை­களைக் கொண்­ட­தென்­பதும் சட்­ட­ச­பை­யான  பிர­தி­நி­திகள் சபையில் அமெ­ரிக்க ஜன­நா­யக கட்­சியின் கை ஒங்­கி­யி­ருப்­பதும் இரண்­டா­வது சபை­யான செனட்­ச­பையில் அமெரிக்க ஜனா­தி­பதி டொனால்ட்­ரம்மின் குடி­ய­ர­சுக்­கட்­சியின் கை ஒங்­கி­யுள்­ள­தென்­பதும் பழைய செய்­தி­க­ளாகும். ஜன­நா­யக கட்­சி­யி­னரால் ஜனா­தி­ப­தி ட்ரம் சொந்­த­ ந­லன்­க­ளுக்­காக உக்ரைன் அரச தலை­வ­ரிடம் ஜன­நா­யக கட்சி அபேட்­ச­க­ரான பிட­னுக்­கெ­தி­ரா­க­ வி­சா­ர­ணைகள் ஆரம்­பிக்­கு­மா­று­ நெ­ருக்­கு­தல்­க­ளை­க் கொ­டுத்­தார் என்­ப­தே­ பி­ர­தா­ன­குற்­றச்­சாட்­டாகும். மேல­தி­க­மா­க­ வி­சா­ர­ணைக்­கு­ ஒத்­து­ழைப்­பு­ கொ­டுக்­க ­வெள்ளை­மா­ளி­கை ­அ­தி­கா­ரி­க­ளை­த் த­டுத்­தார் என்­பதும் குற்­றச்­சாட்­டாகும். பிர­தி­நி­திகள் சபையில் 2019 மார்­க­ழி­ ந­டுப்­ப­கு­தியில் அவ­தூ­றுப்­பி­ரே­ர­ணை ­நி­றை­வேற்­றப்­பட்­டது, 2020 முற்­ப­கு­தியில் செனட் சபையில் விவா­தத்திற்கெடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அமெரிக்­க­ அ­தி­பரின் குடி­ய­ர­சுக்­கட்சி கூடி­ய ­ஆ­ச­னங்­க­ளை­ செனட் சபையில் பெற்­றுள்­ளதால் அவ­தூ­றுப்­பி­ரே­ர­ணை­ செ­னட்­ச­பையில் நிறை­வேற்­ற­மு­டி­யா­த­ நி­லை ­கா­ணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மா­க­வே­ அ­திபர் ட்ரம் அவ­தூ­றுப்­பி­ரே­ர­ணை­ தொ­டர்­பா­க­ மெத்­த­னப்­போக்­கை­ க­டைப்­பி­டித்­தி­ருக்­கிறார். எனினும் 2020 நவம்­பரில் நடை­பெ­ற­வுள்­ள ­அ­திபர் தேர்தலில் ட்ரம்­முக்­கு­ எ­தி­ரா­ன­ ஜ­ன­நா­ய­க­க் கட்­சியின் பிர­சா­ரங்­களில் உக்ரைன் விவ­காரம் நிச்­ச­ய­மா­க­ எ­தி­ரொ­லிக்கும். தற்­போ­து­ கா­ணப்­படும் அர­சியல் பொரு­ளா­தார சூழ­லை­ அ­திபர் ட்ரம் செல்­வாக்­குடன் திகழ்­வதால் இரண்­டா­வ­து ­த­ட­வை­யா­கவும் ட்ரம் ஐனா­தி­ப­தி­யா­க­ வெல்­லக்­கூடும் என­ எ­திர்­பார்க்­கப்­ப­டு­கி­ற­து.­ எ­னினும் சட்­ட­வாட்­சி­ வ­லு­வே­றாக்கம் நல்­லாட்­சிக்­கு­ பேர்போ­ன­ அ­மெரிக்­காவின் ஜன­நா­யகம் அமெரிக்­க­ அ­தி­ப­ருக்­கெ­தி­ரா­ன­ அ­வ­தூ­றுப்­பி­ரே­ர­ணை­மூலம் மீளவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­து­ நி­தர்­ச­ன­மா­னது.

2019 இன் பிறி­தொ­ரு­ அ­ர­சியல் நிகழ்­வி­னை­எ­டுத்துக் கொண்டால் பிரித்­தா­னி­யா­ ஐ­ரோப்­பி­ய­ ஒன்­றி­யத்­தி­லி­ருந்­து­ வி­லகும் பிரெக்சிற் விவ­காரம் நடை­மு­றைக்­கு ­வ­ரு­மென்­பது 2019 மார்­க­ழி­ பொ­துததேர்தலில் பிர­தமர் ஜோன்­சனின் பழ­மை­பேண்­கட்­சி­ பெற்­ற­ வெற்­றி­யால்­உ­று­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 2016இல் சர்­வ­ஜ­ன­ வாக்­கெ­டுப்பின் மூலம் பிரித்­தா­னி­ய ­ஐக்­கிய இராச்­சி­ய­ மக்கள் வில­கு­வ­தற்­கு­ ஆ­ணை­ வ­ழங்­கினார். எனினும் பழ­மை­பேண்­கட்­சி­ பி­ர­த­மர்­களால் பிரெக்சிற் தொடர்­பா­க ­பி­ரிட்டன் பாரா­ளு­மன்றில்  அங்­கீ­காரம் பெற­மு­டி­ய­வில்­லை­. பி­ர­தமர் தெரே­சாமே மூன்­று ­த­ட­வைகள் தம­து­ யோ­ச­னை­க­ளை­ பா­ரா­ளு­மன்றில் முன்­வைத்தார். அங்­கீ­காரம் பெற­மு­டி­ய­வில்­லை­ க­ ைட­சித்­த­லைவர் பத­வியை இரா­ஜி­னா­மா­செய்தார். பிர­தமர் பத­வி­யையும் இரா­ஜி­னா­மா­செய்தார். பழ­மை­பேண் ­கட்­சித்­த­லை­வ­ரா­கவும் பிர­த­ம­ரா­கவும் பொறிஸ் ஜோன்சன் தெரிவு­செய்­யப்­பட்டார். அவ­ர­து­ யோ­ச­னையும் பாரா­ளு­மன்றில் ஏற்­கப்­ப­ட­வில்­லை­. பா­ரா­ளு­மன்­றத்­தை­க­லைத்­து­ மார்­கழி 2019இல் பொதுததேர்தல் நடத்­த ­ஏற்­பா­டு­ செய்தார். பழ­மை­பேண்­கட்சி 365 ஆச­னங்­க­ளை­ப்பெற்­றதால் பிரெக்சின் விலகல் ஜோன்­சனின் யோச­னை­களின்படி ­நி­றை­வேறும் என்­ற­ எ­திர்­பார்ப்­பு­ வ­லு­வ­டைந்­துள்­ளது. மார்­கழி 2019 இல் வில­க­லுக்­கா­ன­ம­சோ­த­ாவை ­பா­ரா­ளு­மன்றில் சமர்­பித்­து அங்­கீ­காரம் பெற்­று­விட்­ட ­நி­லையில் தை 31ஆம் திகதி 2020ஆம் ஆண்­டுக்­கு­ முன்னர் வில­கு­வ­து­ உ­று­தி­யா­கி­விட்­டது.

வல்­ல­ர­சு ­நி­லை­யை­ நோக்­கி ­ந­டை­போடும் மக்கள் சீனா­வுக்கு­ சவால் விடும் வகையில் கொங்கொங் ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெற்­றுள்­ளன. சீனாவின் ஒரு­நாடு இரண்­டு­மு­றை­மைகள் என்­கின்­ற­ நிர்­வா­க­ சித்­தார்ந்­தத்­துக்­கு­நிச்­ச­ய­மா­க­ சவால் ஏற்­பட்­டுள்­ளது. 74 இலட்சம் மக்கள் தொகை­யை­க்கொண்ட 426 சது­ரப்­ப­ரப்­ப­ள­வை­க்கொண்­ட­ கொங்கொங் பிர­தேசம் கைத்­தொழில் விருத்­தியில் மேன்­மை­ அ­டைந்­துள்­ளதுடன் பிரஜை­களின் தலா­வ­ரு­மானம் மிக­ உ­யர்­வா­க ­உள்­ள­து­. பி­ரித்­தா­னி­ய ­கட்­டுப்­பாட்­டுக்குள் நிர்­வ­கிக்­கப்­பட்­ட­கொங்கொங் பிர­தேசம் 1997ஆம் ஆண்­டு ­மக்கள் சீன­ அ­ர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டது. சீனாவின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டு­வ­தற்­கு­ அ­மெரிக்­க­–பி­ரித்­தா­னி­ய­அ­ர­சாங்­கங்கள் காத்­தி­ருக்­கின்­ற­ன­ என்­பது இர­க­சி­ய­மா­ன­தல்­ல­. கொங்கொங் கிளர்ச்­சி­களில் குறிப்­பா­க ­பி­ரிட்­டனின் காங்­கிரஸ் மூல­மா­க­ கா­ணப்­பட்­ட­ன ­எ­ன ­சீ­னா­ குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. எனினும் சீனாவின் பெரு­மைக்கும்  கீர்த்­திக்கும் கொங்கொங் விவ­காரம் ஒரு­ க­ரும்­புள்­ளி­ என்­ப­து­ ம­றுப்­ப­தற்­கில்லை. ஆனால் சீனா­ வன்­மு­றை­யை­ பி­ர­யோ­கிக்­க­வில்­லை ­என்­ப­து­ ஆ­று­த­லா­ன­வி­ட­ய­மாகும்.

இலங்­கையின் புதி­ய­ ஜ­னா­தி­ப­தி­ கோத்த­பாய ­ரா­ஜ­பக் ஷ­ ப­த­வி­யேற்ற சூடு ஆறமுன் இந்­தி­ய­ த­லை­வரின் அழைப்பின் பேரில் இந்­தி­யா­ சென்றார். கார்த்­திகை 29ஆம் திகதி இந்­தி­யா­சென்ற ஜனா­தி­ப­தி­ கோத்தபாயவை சந்­தித்த பி­ர­தமர் மோடி­, இலங்கை இந்­தி­ய­ உ­ற­வு­க­ளை­ மே­லு­மொ­ரு­ பு­தி­ய­ மட்­டத்­துக்­கு­ எ­டுத்­து­ச் சென்­றுள்ளார் என ­து­ணிந்து கூறலாம். இந்­து­ ச­முத்­தி­ரத்தில் சீனாவின் ஆதிக்கம் வலு­வ­டை­வ­தாக இந்­தி­ய­ சந்­தே­கங்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­க ­சி­ல­ ஊ­ட­கங்கள் கருத்­து­ தெரிவித்­துள்ள சூழ்­நி­லையில் இலங்­கை­ ஜ­னா­தி­ப­தியின் விஜயம் இடம்­பெற்­றுள்­ளது. கோத்­த­பா­ய­ –மோ­டி ­உச்­சி­ம­ா­நா­டு­ மி­க ­நட்­பான சூழலில் நடை­பெற்­றது. இலங்கை–இந்­தி­ய­ வி­ரைவில்  நெரு­ட­லா­ன ­வி­ட­யங்கள் மிக ­நு­ணுக்­க­மா­க ­வி­வா­திக்­கப்­பட்­டன. கோத்­த­பா­யவின் இந்­தி­ய­வி­ஜயம் இரு­த­ரப்­புக்கும் என­ ஊ­ட­கங்கள் புக­ழாரம் சூட்­டின. அமெரிக்­க­ அ­திபர் உள்­நாட்டில் அவ­தூ­றுப்­ பி­ரே­ர­ணைக்­கு­ முகம்

கொடுத்த சூழ்­நி­லையில் ஐ.எஸ். பயங்­க­ர­வாத இயக்­க­ த­லைவன் பக்­தா­தி­யை­ அ­மெரிக்­கப் ­ப­டைகள் துல்­லி­ய­மா­ன ­பு­ல­னாய்­வு­த் த­க­வல்கள் மூலம் கொன்­றனர். முன்­னை­ய ­ஜனா­தி­ப­தி­களின் ஆட்­சிக்­கா­லத்தில் நிறை­வேற்ற ­மு­டி­யா­த ­கா­ரி­யத்­தை­ ஜ­னா­தி­ப­தி ட்­ரம்பின் ஆட்­சிக்­கா­லத்தில் நிறை­வேற்­றி­ செல்­வாக்­கு ­அ­தி­க­ரிக்­க­ வாய்ப்­பை­ஏற்­ப­டுத்­தி­யது. செப்­டெம்பர் 11 அல்­கெய்­தா­ அ­மெரிக்­க ­வர்த்­த­க­ கோ­பு­ரத்தின்மீது­ பா­ரி­ய­ தாக்­கு­த­லை­ ந­டத்­தி­யபின் அமெ­ரிக்­காவின் எதிர்ப்­ப­யங்­க­ர­வா­த­ ந­ட­வ­டிக்­கைகள் புதி­ய­தொ­ரு ­தரு­ணத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பாக்­தா­தியின் கொலை­ அ­மெரிக்­க­ எ­திர்­ப்ப­யங்­க­ர­வா­த­தொடர் நட­வ­டிக்­கை­களில் புதி­ய­ ப­ரி­ணா­மத்­தை ­ஏற்­ப­டுத்­தி­யது.

சிரி­ய­ உள்­நாட்­டுப்போர் 2011 இலி­ருந்து இந்­நூற்­றாண்டின் மோச­மா­ன­அ­க­தி­ பி­ரச்­சி­னை­யை­ உ­ரு­வாக்­கி­யது. அமெரிக்கா, ரஸ்யா, சவூ­தி­அ­ரே­பி­யா­, து­ருக்­கி, ­ஈரான் ஆகி­ய­நா­டுகள் உள்­நாட்­டுப்­போரில் ஈடு­பட்­டுள்­ள­ சி­ரி­ய­ அ­ர­ச­த­ரப்­பி­னர்க்கும் சிரி­ய­ அ­ர­சு­ எ­திர்­த்த­ரப்­பி­ன­ருக்­கு­ உ­த­வி­பு­ரிந்­து ­வ­ரு­கி­றார்கள் அமெரிக்க ச­வூ­தி­ அ­ரே­பி­ய ­அ­ர­ச­ எ­திர்ப்­பா­ளர்­கட்கும் ரஸ்யா–ஈரான் சிரி­ய­ அ­ர­சாங்­கத்­தி­னரும் ஆத­ர­வு­ வ­ழங்­கு­கி­றார்கள். 2015இல் ஈராக் சிரி­ய­நா­டு­களில் செல்­வாக்­குடன் பல­மா­க ­வி­ளங்­கிய ஐ.எஸ். அமைப்­பு ­ப­ல­ பி­ர­தா­ன­ ந­க­ரங்­க­ளை­க் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­து­ பெ­று­ம­தி­வாய்ந்­த­ எண்ணெய் வயல்­களின் மூலம் பெரு­வா­ரி­யா­ன­ அந்­நி­ய ­செ­லா­வ­ணி­யை­சு­ருட்­டி­யது. எனினும் அமெரிக்க, ரசி­ய­, ஈரான் ஆத­ர­வு­ப் ப­டைகள் மூலம் ஐஎஸ் தோற்­க­டிக்­கப்­பட்­டது. 2017ஃ2018 இல் ஐ.எஸ். பல­ ந­க­ரங்­க­ளி­லி­ருந்­து பின் வாங்­கி­யது. இச்­சூ­ழலில் ஐ.எஸ். அமைப்பின் ஆற்றல் கேள்­விக்­கு­ரி­ய­தா­கி­யது. ஐ.எஸ். பல­மி­ழக்­க­வில்­லை­. உ­லகின் எப்­ப­கு­தி­யிலும் தாக்குதல் நிகழ்த்­துவோம் என காட்ட 2019  சித்­தி­ரையில் இலங்­கையில் தாக்­குதல் நடத்தி இலங்­கையின் அர­சி­யலில் பெரும் தாக்­கத்­தை­ ஏற்­ப­டுத்­தி­யது. அமெரிக்­க ­அ­திபர் நீண்­ட­கா­ல­ பி­ராந்­தி­ய­ நட்­பு­ அ­ணி­யா­ன­ குர்திஸ் அமைப்­பை­ கை­விட்­டு­ அ­மெரிக்­க­ ப­டை­க­ளை­ சி­ரி­யா­வி­லி­ருந்­து­ வி­லக்­கி­க்கொள்­வ­தா­க­ அ­றி­வித்­த­மை ­அ­மெரிக்­காவின் வெளிநாட்டுக் கொள்­கையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­தா­ எ­ன­ ப­லரும் கேள்­வி­ கேட்கும் நிலைக்­கு­ உள்­ளா­கி­யது.

புரட்­டாதி 14ஆம் திக­தி­ ச­வூ­தி­அ­ரே­பி­ய­ அ­ர­சுக்­கு­ சொந்­த­மா­ன­ அப்­கைத்­துராய்ஸ் பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள இரண்­டு­ பா­ரி­ய­ எண்ணெய் வயல்கள்மீது­ தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. ஐ.எஸ். அமைப்­பே ­உ­ரி­மை­கோ­ரி­யது. என­அ­ழைக்­கப்­படும் பிர­ப­ல­மா­ன­ எண்ணெய் வயல்­க­ளே­ தாக்­கு­த­லுக்­கு ­உள்­ளா­கின. உலகின் பிர­தா­ன­ நாடா­கி­ய­ ச­வூ­தியின் எண்­ணெய் உற்­பத்­தி­சந்­தைப்­ப­டுத்­தலில் பாத­க­மா­ன­ தாக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அமெரிக்­காவின் வர்த்­த­க­ த­டையால் பாதிக்­கப்­பட்­ட­ ஈ­ரா­னுக்கு இத்­தாக்­குதல் ஆறுதல் தந்­தது. காரணம் என்­ன­வெனில் ஈரானின் எண்ணெய் விற்­ப­னையில்­ த­டைகள் இருந்­தாலும் பன்­மு­க­மா­ன­ வ­ழி­களில் அதி­க­ரித்­தது. சவூ­தியின் பிர­ப­ல­மா­ன­ ஊ­ட­க­வி­ய­லாளர் கசோக்கி இஸ்­தான்­புல்­லி­லுள்­ள­ ச­வூ­தி­ து­ணைத்­தூ­த­ராலயத்தில்­ கொ­லை­ செய்­யப்­பட்­ட­மை­ அ­மெரிக்­காவின் இரட்­டை­வே­டத்­தன்­மை­யை­தோ­லு­ரித்­து­ காட்­டி­யது. ஜன­நா­ய­க­ வி­ழு­மி­யங்­க­ளை ­பெ­ரு­ம­திப்­புடன் பின்பற்றுதலாக கூறும் அமெரிக்கா கசோக்கியின் படுகொலைக்கு காரணமான சவூதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசனை கண்டிக்க முற்படவில்லை. உலக அபிப்பிரயாயம் சவூதிஅரேபிய அரசுக்கு எதிராக உருப்பெற்ற நிலையில் சவூதிஅரசு விசாரணை நடத்தி பொறுப்பானவர்களைக் குற்றவாளிகளாக இனம் கண்டு மரண தண்டனையும் விதித்துள்ளதாக அறிவித்தாலும் கசோக்கியின் படுகொலை சவூதிக்கு எதிர் காலத்தில் பல சவால்களை உருவாக்கக் கூடும்.

ஐயம்பதிபிள்ளை தர்மகுலசிங்கம்