அர­சாங்கம் பழி­வாங்கும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுகிறது!

சிங்­கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் கோரிக்கை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், அர­சாங்கம் பழி­வாங்கும் செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடு­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முக­மாக தேசிய கீத­மா­னது சிங்­கள மொழி­யிலும் தமிழ் மொழி­யிலும் கடந்த ஆட்­சி­யின்­போது பாடப்­பட்டு வந்­தது. எனினும் தற்­போது ஆட்­சியில் உள்ள இந்த அர­சாங்­க­மா­னது ஏன் இவ்­வாறு இன நல்­லு­றவை முறிக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­கி­றது எனவும் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

அத்­தோடு இந்த அர­சாங்­க­மா­னது பழி­வாங்கும் செயற்­பா­டு­க­ளில்தான் ஈடு­பட்டு வரு­கின்­றது. அதிலும் அண்­மையில் கைது­செய்­யப்­பட்ட சம்­பிக்க ரண­வக்க குறித்த வழக்கு விசா­ர­ணையிலிருந்து விடு­வித்த பின்னர் மீண்டும் அவ­ரது வழக்கு தூசு தட்­டப்­பட்டு மீண்டும் நீதி­மன்­றத்­துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே புதிய அரசாங்கமானது இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றார்.