சட்­ட­வாட்சி மீதான குற்றச்சாட்டு!

வெளி­நாட்டுத் தூத­ர­கத்தின் பணி­யா­ள­ரா­கிய ஒருவர் மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்ட நட­வ­டிக்­கைகள் நாட்டின் நியா­ய­மான சட்ட நட­வ­டிக்­கை­க­ளாக சர்­வ­தேச மட்­டத்தில் நாட்டின் பெயரைக் காப்­ப­தாக அமை­ய­வில்லை என்ற தொனி­யி­லேயே இந்த விவ­கா­ரத்தில் சுவிற்­சர்லாந்து அர­சாங்கம் கருத்து வெளி­யிட்­டுள்­ளது. தனது தூத­ரக அதி­காரி ஒருவர் மீது தெளி­வற்ற முறையில் சட்டம் பாய்ந்­தி­ருப்­ப­தா­கவும், தூத­ரகம் என்ற அந்­தஸ்தில் அதன் பணி­யா­ளர்­க­ளுக்கு இருக்க வேண்­டிய பாது­காப்பு உரி­மைகள் போதிய அளவில் நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை என்ற சாரத்­தி­லேயே சுவிற்­ச­ர்லாந்து அரசின் நிலைப்­பாடு வெளிப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

சட்­ட­வாட்சி சீராக நடை­பெற வேண்டும். அதன் சர்­வ­தேச அள­வி­லான புக­ழுக்கு பங்கம் ஏற்­ப­டாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒரு நாட்டின் நல்­லாட்­சிக்கும், சர்­வ­தேச அள­வி­லான அங்­கீ­கா­ரத்­திற்கும் மிக முக்­கி­ய­மா­னது.

இந்த விடயம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. சட்டம் ,ஒழுங்கு என்­பது ஒரு நாட்டு அரச நிர்­வா­கத்தின் உயிர்­நா­டி­யாகும். சட்டம், ஒழுங்கு சரி­யான முறையில் கடைப்­பி­டிக்­கப்­ப­டா­விட்டால் – சீராகச் செயற்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால் அங்கு அரச நிர்­வாகம் குழப்­ப­க­ர­மான நிலை­யி­லேயே இருக்கும். அரச நிர்­வாகம் குழப்­ப­க­ர­மாக இருந்தால் மக்­க­ளு­டைய வாழ்க்கை முறை பாதிக்­கப்­படும். ஏனைய செயற்­பா­டு­களும் குழம்­பிய நிலை­மைக்கு ஆளாக நேரிடும்.

இதன் கார­ண­மா­கத்தான் சட்­ட­வாட்சி சீராக நடை­பெற வேண்­டி­யதை உறு­திப்­ப­டுத்­து­மாறு சுவிஸ் அர­சாங்கம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அண்­மையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. ஒரு நாட்டின் அர­சாங்­கத்­திற்கு இன்­னு­மொரு நாட்டின் அர­சாங்கம் அரச நிர்­வா­கத்தை சீராக நடத்த வேண்டும் என்று அறி­வு­றுத்­து­வது அல்­லது அறி­வுரை வழங்­கு­வது நல்­ல­தல்ல.

அர­சாங்கம் என்­பது மக்­களால் நிறு­வப்­ப­டு­வது. அதற்­கென இறைமை உண்டு. அர­சாங்கம் தனது நாட்டு மக்­க­ளுக்கு பொறுப்புக்கூறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அர­சாங்­கத்­திற்குக் கிடைக்­கின்ற புகழும் மரி­யா­தையும் அந்த நாட்டின் மக்­க­ளுக்குக் கிடைப்­ப­தா­கவே கரு­தப்­படும். அதே­போன்று அர­சாங்­கத்­திற்குக் கிடைக்­கின்ற விமர்­ச­னங்­களும் ஆட்சி முறை பற்­றிய கருத்­துக்­களும் அந்த நாட்டு மக்­க­ளுக்குக் கிடைப்­ப­வை­யா­கவே கரு­தப்­படும்.

சுவிஸ் நாட்டின் இலங்­கைக்­கான தூத­ரக விசா வழங்கும் பிரிவின் பணி­யா­ள­ரா­கிய கார்­னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண்­மணி மீது சட்டம் பாய்ந்­துள்ள முறைமை குறித்து சுவிஸ் அர­சாங்கம் விடுத்­தி­ருந்த ஓர் அறிக்­கை­யி­லேயே இந்த விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. இலங்கை தனது சட்­ட­வாட்­சியை சர்­வ­தேச தரத்­திற்கு, அந்த அள­வி­லான நற்­பெ­ய­ருக்குப் பங்கம் ஏற்­ப­டாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி­யி­ருந்­தது.

இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரா­ஜ­ரீக உற­வென்­பது மிகவும் கவ­ன­மாகக் கையா­ளப்­பட வேண்­டி­யது. ஒரு நாடு இன்­னு­மொரு நாட்டை அடக்­கி­யாள்­கின்ற வகை­யிலோ அல்­லது அந்த நாட்டின் கௌர­வ­மான நிலைப்­பா­டு­களைப் பாதிக்­கின்ற வகை­யிலோ நடந்து கொள்­வது இரு நாடு­க­ளுக்குமிடை­யி­லான நல்­லு­ற­வுக்கும், இரா­ஜ­ரீக உறவு நிலை­மைக்கும் நல்­ல­தல்ல.

குற்­றச்­சாட்டு பொய்­யா­னது அத்­த­கைய சம்­பவம் நடை­பெ­றவே இல்லை
குறிப்­பாக இலங்கை மோச­மா­னதோர் உள்­நாட்டு யுத்­தத்தின் பின்னர் வளர்ச்சிப் பாதையில் முன்­னேறிச் செல்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது. இந்த முன்­னேற்­றத்­திற்கு சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்பும், ஒத்­தா­சையும் உத­வி­களும் அவ­சி­ய­மாகி இருக்­கின்­றன.

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான யுத்தத் ­தின்­போது பயங்­க­ர­வாதம் என்ற பெயரில் அதனை அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாகக் கையாள்­வ­தற்கு அயல் நாடா­கிய இந்­தி­யாவும் சர்­வ­தேச நாடு­களும் உத­விக்­க­ரங்­களை நீட்டியிருந்­தன. இந்த உத­விக்­கரம் என்­பது இரா­ணுவ வழி­மு­றை­க­ளி­லான உத­வி­க­ளாக மட்டும் அமைந்­தி­ருக்­க­வில்லை. பண்­பியல் ரீதியில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லாட்சி ஒன்றை நிலைப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான உத­வி­களும் அடங்கியிருந்­தன என்­பதை மறந்­து­விட முடி­யாது.

இறை­மை­யுள்ள அர­சாங்கம் ஒன்று தன்­னெ­ழுச்சிகொண்ட சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும், ஆபத்­துக்­க­ளுக்கும் உள்­ளா­கும்­போது ஏனைய அர­சுகள் மனி­தா­பி­மான ரீதியில் அதற்கு உதவி புரிய முன்­வ­ரு­வது இயல்பு. இந்த மனி­தா­பி­மான நிலைப்­பாடு சம்­பந்­தப்­பட்ட நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பாது­காப்பு மற்றும் பொரு­ளா­தார நலன்­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கலாம். ஆனாலும் அத்­த­கைய உற­வுகள் அந்­தந்த நாடு­களின் இறைமை என்ற எல்­லையைக் கடந்து செயற்­ப­டு­வ­தில்லை. ஆனால் சுவிஸ் தூத­ர­கத்தின் உள்ளூர் பணி­யா­ள­ரா­கிய பெண்­மணி மீது சட்ட நட­வ­டிக்­கைகள் பாய்ச்­சப்­பட்­டி­ருக்­கின்ற முறை­மை­யா­னது இரு நாடு­க­ளுக்குமிடை­யி­லான இரா­ஜ­ரீக நல்­லு­றவில் கீறலை ஏற்­ப­டுத்தியுள்­ளது. மனித உரி­மைகள், மனி­தா­பி­மான நிலை­மைகள் என்­ப­னவற்றில் உலக நாடுகள் மத்­தியில் சுவிற்­ச­ர்லாந்து முன்­ன­ணியில் திகழ்­கின்ற ஒரு நாடாகும். சர்­வ­தேச மட்­டத்தில் இது­வி­ட­யத்தில் தனித்­து­வ­மான ஓரி­டத்தைக் கொண்­டுள்ள அந்த நாட்­டுடன் இலங்கை அரசு முரண்­ப­டு­கின்ற வகையில் சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருப்­பது அதன் சர்­வ­தேச உறவு நிலை­மைக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல என்­பதே மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களின் கருத்து.

வெள்ளை வானில் வந்­த­வர்கள் தன்னைக் கடத்­திச்­சென்று துன்­பு­றுத்­தி­னார்கள் என்று அந்தப் பெண்­மணி தெரி­வித்­தி­ருந்த குற்­றச்­சாட்டு பொய்­யா­னது. அத்­த­கைய ஒரு சம்­பவம் இடம்­பெ­றவே இல்லை. அர­சாங்­கத்­திற்கு சர்­வ­தேச ரீதியில் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தும் வகையில் இந்தக் குற்­றச்­சாட்டை அந்தப் பெண்­மணி முன்­வைத்­தி­ருந்தார் என்­பது அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும்.

இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள வெள்ளை வான் கடத்தல் என்ற குற்­றச்­சாட்டு, அர­சாங்கம் என்ற பொது நிலை­மையைக் கடந்து ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவை சம்­பந்­தப்­ப­டுத்­திய ஒரு விடயம் என்றும் அர­சாங்கத் தரப்பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இந்த விவ­கா­ரத்தில் தானே பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக நாட்டின் அதி உயர் அதி­கா­ரத்­தையும் அதி உயர்ந்த தலைமை நிலை­மை­யையும் கொண்­டுள்ள ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்கது.

நடந்­த­தென்ன…..?
ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெற்றி பெற்­றதும், மனித உரிமை மீறல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட முக்­கி­ய­மான குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் முக்­கிய அதி­கா­ரி­யாகப் பணி­யாற்­றிய நிசாந்த சில்வா தனது குடும்­பத்­தி­ன­ருடன் சுவிற்­ச­ர்லாந்து நாட்­டுக்குத் தப்­பி­யோ­டினார்.

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் யுத்த மோதல்கள் காலத்தில் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பொறுப்­பேற்­றி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக் ஷ மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவ­ரது சகோ­தரர் மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாகப் பதவியேற்­றி­ருந்த அக்­கா­லப்­ப­கு­தியில் அதி­கார பலம் மிகுந்த ஒரு­வ­ராக கோத்­த­பாய ராஜ­பக் ஷ திகழ்ந்தார். அத்­துடன் மஹிந்த ராஜ­பக் ஷ காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­ மீ­றல்­களில் ஈடு­பட்­டி­ருந்த அரச மற்றும் நிர்­வாகத் துறை­களைச் சார்ந்த முக்­கி­யஸ்­தர்கள் தண்­டனை விலக்­கீட்டு கலா­சா­ரத்தின் அனு­கூ­லங்­களைப் பெற்­றி­ருந்­த­தாகக் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன.

அந்த வகையில் சண்டே லீடர் செய்­தித்­தாளின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் கொலைச்­சம்­பவம், ஊட­க ­வி­ய­லாளர் பிரகீத் எக்னெ­லி­கொட காணா மல் போயுள்­ளமை, 11 தமிழ் மாண­வர் கள் கடத்­திச்­செல்­லப்­பட்டு வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டமை, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயர் கடத்­தப்­பட்­டமை, யாழ்ப்­பா­ணத்தில் வித்­தியா சிவ­லோ­க­நாதன் என்ற பாட­சாலை மாணவி கடத்­தப்­பட்டு கூட்டு வன்­மு­றையின் பின்னர் கொடூ­ர­மாகக் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் உள்­ளிட்ட முக்­கி­ய­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லான குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புல­னாய்வு பிரிவு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தது. இந்த விசா­ர­ணை­க­ளுக்கு முக்­கிய பொறுப்­ப­தி­கா­ரி­யாக நிசாந்த சில்வா செயற்­பட்­டி­ருந்தார்.

ஜனா­தி­ப­தி­யாகப் பதவி ஏற்­றதும் பொலிஸ் புல­னாய்வு பிரிவில் அதி­ர­டி­யாக மாற்­றங்கள் செய்­யப்­பட்­டன. அந்தப் பிரிவின் பணிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர, பொலிஸ் இன்ஸ்­பெக்டர் நிசாந்த சில்வா ஆகி­யோரின் மெய்ப்­பா­து­காவல் சடு­தி­யாக நீக்­கப்­பட்­டது. ஷானி அபே­சே­கர காலி பிர­தேச பிர­தி­பொலிஸ் மா அதி­பரின் பிரத்­தி­யேக உத­வி­யா­ள­ராக இடம் மாற்றம் செய்­யப்­பட்டார். இந்தப் பத­விக்குப் பொது­வாக பொலிஸ் இன்ஸ்­பெக்டர் தரத்­தி­லான ஒரு­வரே நிய­மிக்­கப்­ப­டு­வது வழக்கம். அந்த வழக்­கத்­துக்கு மாறாக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர தண்­டனை இடமாற்­றத்தின் கீழான ஒருமுறை­மையில் இடமாற்றம் செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே நிசாந்த சில்வா நாட்­டை­விட்டு குடும்­பத்­தி­ன­ருடன் சுவிற்­ச­ர்லாந்­துக்குத் தப்­பி­யோ­டினார். நாட்டை விட்டுச் செல்­வ­தற்கு பொலிஸ் திணைக்­கள நடை­மு­றை­க­ளுக்­க­மைய அவர் முன் அனு­மதி பெற்­றி­ருக்­க­வில்லை. நாட்­டை­விட்டுச் செல்­வது குறித்து முறை­யாகத் தனது மேல­தி­கா­ரி­க­ளுக்கோ அல்­லது பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கோ அவர் அறி­வித்­தி­ருக்­கவும் இல்லை. இதற்­காக அவர் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

நிசாந்த சில்வா நாட்­டை­விட்டுத் தப்­பி­யோடி சுவிற்­ச­ர்லாந்தில் அடைக்­கலம் புகு­வ­தற்கு கொழும்பிலுள்ள அந்த நாட்டின் தூத­ரகம் உரிய விசா அனு­ம­தி­களை வழங்கியிருந்த பின்­ன­ணி­யி­லேயே வெள்ளை வானில் வந்­த­வர்­க­ளினால் தான் கடத்திச் செல்­லப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் துன்­பு­றுத்­தப்­பட்­ட­தா­கவும், அந்தத் தூத­ரக விசா பிரிவைச் சேர்ந்த உள்­ளூர்­வா­சி­யா­கிய பெண்­மணி கார்­னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தெரி­வித்­தி­ருந்தார்.

வெள்ளை வானும் பின்­ன­ணியும்
யுத்த காலத்தில் வெள்­ளைவான் என்­பது அச்­சு­றுத்­தலின் அடை­யா­ள­மாக மிகுந்த அச்­சத்தின் ஒரு குறி­யீ­டாகத் திகழ்ந்­தது. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இந்த நிலை­மையில் ஏற்­பட்­டி­ருந்த மாற்றம், 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அந்த நிலைமை வெகு­வாக முன்­னேற்றம் அடைந்­தி­ருந்­தது.

ஆயினும் 2019 ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் வெள்­ளைவான் குறித்த அச்சம் மீண்டும் தலை­யெ­டுத்­துள்­ளது. இந்தத் தேர்­தலின் மூலம் மீண்டும் ஏற்­பட்­டுள்ள ஓர் ஆட்சி மாற்­றமே இதற்கு முக்­கிய காரணம். இந்த ஆட்சி மாற்றம் நாட்டை மீண்டும் ஓர் இருண்ட யுகத்­திற்கு இட்டுச் சென்­று­வி­டுமோ என்ற அர­சியல் ரீதி­யான அச்சம் பல மட்­டங்­க­ளிலும் பல­ரி­டமும் காணப்­ப­டு­கின்­றது.பொலிஸ் புல­னாய்வு பிரிவின் அதி­கா­ரி­யாகப் பணி­யாற்­றிய நிசாந்த சில்வா விசா­ரணை நடத்­திய சம்­ப­வங்கள் நாட்­டையே உலுக்கி அதிர்ச்­சிக்குள்­ளாக்கி இருந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தச் சம்­ப­வங்­களில் அதி­க­மா­ன­வற்றில் வெள்­ளைவான் விவ­காரம் இழை­யோடியுள்ள அம்­சமே, அந்த விசா­ர­ணை­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­களின் உயிர்­நா­டி­யாகத் தெரி­கின்­றது. நிசாந்த சில்வா மேற்­கொண்­டி­ருந்த விசா­ர­ணைகள் பக்­கச்­சார்­பா­னவை என்றும், குறிப்­பாக அர­சியல் ரீதி­யாக அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளா­கவும் இப்­போது சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இதன் தொடர்­நி­லை­யா­கவே சுவிஸ் தூத­ரகப் பணி­யாளர் கார்­னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் விவ­காரம் கையா­ளப்­பட்­டிருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

உள்­ளூர்­வா­சி­யா­கிய கார்­னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் எந்­த­வி­த­மான அர­சியல் பின்­ன­ணி­யையும் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. சாதா­ரண ஒரு பிர­ஜை­யா­கவே அவர் கரு­தப்­ப­டு­கின்றார். இருப்­பினும் வெள்­ளைவான் என்ற கொதி­நிலை சார்ந்த அர­சியல் குறி­யீட்­டுடன் – அந்தக் குறி­யீட்டுச் சம்­ப­வத்­துடன் அவர் தொடர்­பு­பட்­டி­ருப்­பது நிலை­மை­களை சிக்­க­லாக்­கி­யி­ருக்­கின்­றது. அவர் கூறி­யி­ருப்­பதைப் போன்று அவர் வெள்­ளைவான் மூல­மாக எவ­ராலும் கடத்­தப்­ப­ட­வில்லை என்­பதை அழுத்தம் திருத்­த­மாகக் கூறி­யுள்ள அரச தரப்­பினர், அவர் குறிப்­பிட்ட சம்­ப­வத்தில் உண்­மை­யாக என்ன நடந்­தது என்­பதை விப­ர­மாக வெளி­யி­ட­வில்லை. அந்தப் பெண்­மணி சம்­பவ தினத்­தன்று சம்­பவ நேரத்தில் வீடொன்­றிற்குச் சென்­றி­ருந்­த­தா­க­வுமே தகவல் வெளி­யாகியுள்­ளது. ஆனால் அந்த வீட்டில் என்ன நடந்­தது அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் யார் என்­பது பற்­றிய தக­வல்கள் வெளி­யா­க­வில்லை.

ஆனால் வெள்­ளை­வானில் கடத்­தப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்த தகவல் தேசிய மட்­டத்தில் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டா­கவே வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்தக் குற்­றச்­சாட்டைச் சுமத்­து­வ­தற்­கான பின்­னணி என்ன அதற்­கான கார­ணங்கள் என்ன என்­பது போன்ற விப­ரங்­களை அறிந்து கொள்­வ­தற்­கா­கவே அவர் மீதான சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

சட்­டத்தின் பாய்ச்சல்
வெளி­நாட்டுத் தூத­ர­கத்தின் பணி­யா­ள­ரா­கிய ஒருவர் மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்ட நட­வ­டிக்­கைகள் நாட்டின் நியா­ய­மான சட்ட நட­வ­டிக்­கை­க­ளாக சர்­வ­தேச மட்­டத்தில் நாட்டின் பெயரைக் காப்­ப­தாக அமை­ய­வில்லை என்ற தொனி­யி­லேயே இந்த விவ­கா­ரத்தில் சுவிற்­சர்லாந்து அர­சாங்கம் கருத்து வெளி­யிட்­டுள்­ளது. தனது தூத­ரக அதி­காரி ஒருவர் மீது தெளி­வற்ற முறையில் சட்டம் பாய்ந்­தி­ருப்­ப­தா­கவும், தூத­ரகம் என்ற அந்­தஸ்தில் அதன் பணி­யா­ளர்­க­ளுக்கு இருக்க வேண்­டிய பாது­காப்பு உரி­மைகள் போதிய அளவில் நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை என்ற சாரத்­தி­லேயே சுவிற்­ச­ர்லாந்து அரசின் நிலைப்­பாடு வெளிப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

இந்த விவ­கா­ரத்­தினால் இரு நாடு­க­ளுக்குமிடை­யி­லான இரா­ஜந்­திர உற­வு­களில் ஏற்­பட்­டுள்ள கீறல் நிலை­மை­களை நிவர்த்தி செய்­வ­தற்­காக உயர்மட்ட இரா­ஜ­தந்­திரி ஒரு­வரை  சுவிற்­ச­ர்லாந்து அரசு இலங்­கைக்கு அனுப்பி முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருக்­கின்­றது. ஆயினும் அந்தப் பேச்­சு­வார்த்­தை­களில் இயல்­பான சுமுக நிலைமை ஏற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

இந்த விவ­கா­ரத்தில் இரு நாடு­களின் நேரடி நிலையில் முன்­னேற்றம் காணப்­ப­டா­த­தை­ய­டுத்து, இந்த விட­யத்தை அடுத்து ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள மனித உரிமை அமர்வில் கையாள்­வ­தற்­கான முயற்­சிகள் சுவிற்­சர்­லாந்து அரச தரப்பில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

 பி.மாணிக்­க­வா­சகம்