அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர்.
மேலும் பிரபு, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அர்ஜுன் சிதம்பரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal