ஒற்­று­மை­யின் அவசியம் !

தமிழ் மக்­களின் ஏகோ­பித்த அர ­சியல் தலை­மை­யாகத் தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பு விளங்­ கிய போதிலும், கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ ழ­ரசுக் கட்சி அதன் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் சம அந்­தஸ்தும், சம உரி­மையும் கொண்­ட­தாகச் செயற்­ப­ட­வில்லை. தமி­ழ­ரசுக் கட்­ சியின் வளர்ச்­சி­யிலும், மக்கள் மத்­தியில் அதன் செல்­வாக்கை வளர்த்துக் கொள்­வ­தி­லுமே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. 

நீண்ட வர­லாற்றைக் கொண்ட தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் ஒரு முக்­கி­ய­மான கால கட்­டத்தை வந்­த­டைந்­தி­ருக்­கின்­றது. தமிழ் அர­சியல் சக்­திகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து வலு­வாக இந்தப் போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை இப்­போது எழுந்­துள்­ளது. இந்தத் தேவை காலம் கால­மாக நிலவி வந்­துள்ள போதிலும் இப்­போ­தைய அர­சியல் சூழலில் தமிழ் மக்­களின் இருப்பை உறுதி செய்­வ­தற்கு தமிழ்த் தரப்பின் அர­சியல் திரட்சி என்­பது இன்­றி­ய­மை­யாத ஒன்­றாக மாறி­யுள்­ளது.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் நீண்ட கால­மாகத் தொடர்­கின்ற போதிலும், இறுக்­க­மான ஒற்­று­மை­யுடன் அது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. தமிழ் அர­சியல் வர­லாற்றில் இது மிகக் கசப்­பான ஓர் அனு­ப­வ­மாகப் பதி­வாகி உள்­ளது.

இன ரீதி­யான ஒடுக்­கு­மு­றைக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து உள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள். இந்த ஒடுக்­கு­முறை காலத்­துக்குக் காலம் அர­சியல் சூழ­லுக்கு ஏற்ப பல்­வேறு வடி­வங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் அந்த ஒடுக்­கு­மு­றையை ஒன்­றி­ணைந்­ததோர் அர­சியல் போராட்­டத்தின் ஊடாக எதிர்­கொள்ள அவர்கள் தவ­றி­யி­ருக்­கின்­றார்கள். அர­சியல் ரீதி­யான ஒற்­று­மை­யின்மை என்­பது இன அடக்­கு ­மு­றைக்குச் சமாந்­த­ர­மாக, பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய தமிழ் மக்கள் மத்­தியில் தொடர்ந்து நிலவி வரு­கின்­றது.

தமிழ் அர­சியல் தரப்பு என்­பது பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகப் பரி­ண­மிக்­க­வில்லை. இன ரீதி­யான ஒரு வட்­டத்­துக்­குள்­ளேயே அது ஒடுங்கிக் கிடக்­கின்­றது. குறுந்­தே­சி­ய­வா­தத்­துடன் வரட்டுத் தன­மான அர­சியல் செயற்­பா­டு­க­ளி­லேயே அது மூழ்கிக் கிடக்­கின்­றது. ஆனால் தமிழ் மக்கள் மீது தொடர்­கின்ற அர­சியல் ரீதி­யான ஒடுக்­கு­முறை என்­பது எதி­ர­ணியில் விரி­வா­ன­தொரு தளத்தில் வீச்­சுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. இன ரீதி­யான முரண்­பா­டாக அமைந்­துள்ள போதிலும், தமிழ்த் தரப்பைப் போன்று எதிர்த்­த­ரப்பு இன ரீதி­யான அடை­யா­ளத்தைப் பெய­ர­ளவில் மட்டும் கொண்­டி­ருக்­க­வில்லை. ஆனாலும் அத­னு­டைய வலி­மையும் வீச்சும் தமிழ் மக்­களை நிலை­கு­லையச் செய்­வ­தா­கவே தொடர்­கின்­றது.

பல முனை­க­ளிலும் பல்­வேறு தளங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற இந்த இன ஒடுக்­கு­மு­றையின் நீள அக­லத்­தையும், ஆழத்­தையும் தமிழ் அர­சியல் தரப்பு இன்னும் சரி­யான முறையில் உணர்ந்து கொள்­ள­வில்லை.

அர­சியல் உரிமை மறுப்பு என்­பது பரந்து விரிந்த பரி­மா­ணத்தைக் கொண்­டி­ருக்­கின்­றது. வெறு­மனே அர­சியல் உரி­மைகள் மட்டும் மறுக்­கப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­களின் சமூக உரிமை, மொழி­யு­ரிமை, மத உரிமை, பொரு­ளா­தார உரிமை, வாழ்­வியல் உரிமை என பல்­வேறு தளங்­களில் இந்த உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­கின்­றன. மறை­முகச் செயற்­பா­டு­களின் மூலம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

தனித்­துவ அடை­யாளச் செயற்­பா­டுகள்

ஆனால் அந்த உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­கின்ற நிலை­மையை அதன் சீரிய தன்­மையை தமிழ் அர­சியல் தரப்பு உணர மறுக்­கின்­றது. அல்­லது அந்த யதார்த்­தத்தை நன்கு தெரிந்து கொண்டு, அறி­யா­ததைப் போன்று அர­சியல் ரீதி­யாகப் பாசாங்கு செய்­கின்­றது என்றே கூற வேண்­டி­யுள்­ளது.

தமிழ் மக்­களின் உரி­மைக்­கான தாயகம், சுய­நிர்­ணயம், பகி­ரப்­பட்ட இறை­மை­யுடன் கூடிய பிராந்­திய சுயாட்சி என்­பது போன்ற அடிப்­படை நிலை­மை­களைக் கொண்டு அது தமிழ்த் தேசி­ய­மாக அர­சி­யலில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த அடை­யா­ளத்தின் கீழேயே அனைத்துத் தமிழ் அர­சியல் கட்­சி­களும், அர­சியல் அமைப்­புக்­களும் – ஏன் சமூக அமைப்­புக்­களும் கூட பெய­ரி­டப்­பட்டு, அதற்­கான செயற்­பா­டு­க­ளையும் போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

ஆரம்ப காலத்தில் அகில இலங்கைத் தமிழ்க்­காங்­கிரஸ், தமி­ழ­ரசுக் கட்சி என்ற இரண்டு பெரும் சக்­தி­க­ளாகத் திகழ்ந்த அர­சியல் அமைப்­புக்கள் ஆயுதப் போராட்ட காலத்தில் பல்­வேறு பிரி­வு­க­ளாக தமிழ் ஈழம் என்ற தனி­நாட்டை இலக்­காகக் கொண்டு தமக்­கான பெயர்­களைச் சூட்­டிக்­கொண்­டன. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள், தமி­ழீழ விடு­தலை இயக்கம், ஈழ மக்கள் புரட்­சி­கர முன்­னணி, ஈழ மாணவர் புரட்­சி­கர அமைப்பு போன்ற பெயர்­களில் அந்த ஆயு­த­மேந்­திய அமைப்­புக்கள் செயற்­பட்­டி­ருந்­தன.

தீவி­ர­வாதப் போக்கில் போராட்டம் நடத்­திய ஆயு­த­மேந்­திய குழுக்­க­ளுக்கு மறு­பு­றத்தில் தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தமிழர் விடு­தலைக் கூட்­டணி என்ற கூட்­ட­மைப்பை மலை­யகக் கட்­சி­யா­கிய இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர­ஸையும் இணைத்துக் கொண்டு செயற்­பட்­டன. ஆயு­த­மேந்­திய போராட்டம் மேலெ­ழுந்த போது மித­வாத அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டுகள் மந்­த­ம­டைந்­தன.

இந்­தி­யாவின் தலை­யீட்டைத் தொடர்ந்து இலங்­கையில் காலடி எடுத்து வைத்த இந்­திய அமை­திப்­படை காலத்தில் விடு­த­லைப்­பு­லி­களைத் தவிர ஏனைய அமைப்­புக்கள் ஆயுதக் குழுக்கள் ஜன­நா­யக வழிக்குத் திரும்­பின. அந்த அமைப்­புக்கள் தேர்­தலில் பங்­கேற்­ப­தற்குத் தமிழர் விடு­தலைக் கூட்­டணி களம் அமைத்துக் கொடுத்­தி­ருந்­தது. ஆயினும் ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சி­யா­கிய ஈ.பி.­டி.பி. தனித்து சுய அடை­யா­ளத்தில் ஜன­நா­யக வழி­மு­றையில் தேர்­தலில் பங்­கேற்­றது. அது தொடர்ந்து தனிக்­கட்­சி­யாக இன்னும் செயற்­பட்டு வரு­கின்­றது.

விடு­த­லைப்­பு­லி­களின் ஆதிக்கம் மேலோங்கி, அவர்கள் தனிச் சக்­தி­யாக யுத்­தத்தில் ஈடு­பட்­ட­போது பாது­காப்பு உள்­ளிட்ட கார­ணங்­க­ளுக்­காக தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் செய­லி­ழந்­தது. தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியைப் போன்­றதோர் அர­சியல் அமைப்பின் அவ­சி­யத்தை உணர்ந்த தமிழ்த்­த­ரப்­பினால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. அதற்கு விடு­த­லைப்­பு­லி­களும் பச்சை விளக்கைக் காட்­டி­யி­ருந்­தனர்.

ஆயுதப் போராட்ட காலத்தில் எவ்­வாறு ஆயுத குழுக்கள் ­த­னித்­த­னி­யாக இயங்­கி­னவோ அதே­போன்று விடு­த­லைப்­பு­லி­களின் காலத்­திலும், யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்­னரும் அந்த அர­சியல் கட்­சி­களும், ஏனைய அர­சியல் கட்­சி­களும் தனித்­துவ அடை­யா­ளத்­துடன் இயங்கும் நிலைமை தொடர்ந்­தது. தொடர்­கின்­றது.

குடும்ப எதேச்­ச­தி­கா­ரத்தின் வீழ்ச்சி

தமிழ்த் தரப்பில் அர­சியல் கட்­சிகள் தனித்­து­வ­மான அடை­யா­ளத்­துடன் செயற்­ப­டு­வ­தி­லேயே கவ­ன­மாக இருக்­கின்­றன. ஆனால் அவற்றின் செயற்­பா­டுகள் தமிழ்த் தேசி­யத்­தையும், தமிழ் மக்­க­ளையும் இன ரீதி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தி­லேயே அதிகம் கவ­னக்­கு­விப்பைக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால் எதிர்த்­த­ரப்­பா­கிய பேரின அர­சியல் கட்­சிகள் சிங்­கள பௌத்த தேசி­யத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து கிடந்­தாலும் பெய­ர­ளவில் முழு நாட்­டையும் பிர­தி­ப­லிப்­ப­தா­கவே தங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களைப் பேணி வரு­கின்­றன. ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி, பொது­ஜன பெர­முன என்ற பொது­மக்கள் கட்சி என்­ப­வற்றை இதற்கு உதா­ர­ண­மாகக் கொள்ள முடியும்.

அந்தக் கட்­சி­களும் பெய­ர­ள­வி­லான தமது தனித்­து­வத்தைப் பேணு­வ­திலும் வளர்ப்­ப­திலும் சக கட்­சி­க­ளுடன் போட்டி போட்டுக் கொண்டு அர­சியல் செய்­தாலும், தமிழ் மக்­க­ளு­டைய விட­யங்கள் அல்­லது விவ­கா­ரங்­களில் அவைகள் அனைத்தும் ஒரே இலக்­கையும் ஒரே நோக்­கத்­தையும் கொண்­ட­தாக தமக்குள் ஐக்­கி­யப்­ப­டு­வதைக் காண முடி­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்­கு­வதில் அல்­லது இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் அந்தக் கட்­சிகள் தேசிய மட்­டத்தில் பொது­வா­னதோர் அர­சியல் கொள்­கையைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றன. இந்த ஒன்­றி­ணை­வையும், ஒரே இலக்கைக் கொண்ட செயற்­பாட்­டையும் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற கடந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களின் மூலம் சிறந்த உதா­ர­ணமாக் கண்­கூ­டாகக் காண முடிந்­தது.

ஐக்­கிய தேசிய கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தேசிய மட்­டத்­தி­லான இரு பெரும் அர­சியல் கட்­சி­க­ளாகத் திகழ்ந்­தன. இந்த இரண்டு கட்­சி­க­ளுமே மாறி மாறி ஆட்சி நடத்தி வந்­துள்­ளன. இவற்றில் ஒரு கட்சி தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முற்­ப­டும்­போது அல்­லது முற்­ப­டு­வ­தாகக்

காட்­டு­கின்ற அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும்­போது எதிர்க்­கட்­சி­யா­கிய மற்ற கட்சி அதற்கு தனது முழு எதிர்ப்­பையும் காட்டி, அந்த முயற்­சியை முறி­ய­டித்­து­வி­டு­வ­தையே தமது வழ­மை­யான அர­சியல் செயற்­பா­டாகக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால் யுத்தம் முடி­வ­டைந்த ஆறாம் ஆண்டு 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்­ட­போது, இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்த ராஜ­பக் ஷ குடும்ப எதேச்­ச­தி­கார ஆட்­சிக்கு முடிவு கட்­டின. அதன் விளை­வாக ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்த நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யது.

தேர்­தலில் ஆத­ரித்­தோரின் எதிர்­பார்ப்­புகள் நிரா­க­ரிப்பு

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் ஒரு திருப்­பு­மு­னை­யா­கவும், அர­சியல் ரீதி­யாக அதி­ச­ய­மான நிகழ்­வா­கவும் இந்த இரு கட்சி அர­சாங்கம் அமைந்­தது. பாம்பும் கீரியும் போல அர­சி­யலில் நேர் முர­ணான நிலை­மை­களைக் கொண்­டி­ருந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து அமைத்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான ஓர் அரிய வாய்ப்பு கிட்­டி­ய­தா­கவே பலரும் நம்­பி­னார்கள். எதிர்­பார்த்­தார்கள்.

ஆனால் அந்த இரு கட்சி அர­சாங்கம் அர­சியல் தீர்வு காண்­ப­தாகப் போக்குக் காட்­டி­ய­தே­யொ­ழிய அர்த்­த­முள்­ள­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூறு­வ­தாக நல்­லாட்சி அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணை­க­ளுக்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஒப்­புதல் அளித்­த­போ­திலும், பொறுப்பு கூறு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளையும் இதய சுத்­தி­யுடன் முன்­னெ­டுக்­க­வில்லை.

நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தாக ஒப்­புக்­கொண்ட போதிலும், அத­னையும் இழுத்­த­டித்து காலம் கடத்தி ஆட்சி அமைப்­ப­தற்குத் தேர்­தலில் உத­வி­ பு­ரிந்த சிறு­பான்மை இன மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு முர­ணான செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுத்­தன. தமிழ்த்­தே­சி­யத்­துக்கு எதி­ரான சிங்­கள பௌத்த தேசி­யத்தை நிலை­நாட்­டு­வ­தி­லேயே அரசு கவனம் செலுத்­தி­யது.

வடக்கு–கிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்­பாட்டைச் சிதைப்­ப­தற்­காக யுத்­தத்­தின்­போது இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றும் போர்­வையில் தமிழர் பிர­தே­சத்தில் இருந்து சிங்­கள மக்­களும் இடம்­பெ­யர்ந்­தார்கள் எனக் கூறி சிங்­களக் குடி­யேற்­றங்­களை வெளிப்­ப­டை­யா­கவே நல்­லாட்சி அரசு முன்­னெ­டுத்­தது.

சிஹல உறு­மய, பொது­பல சேனா போன்ற சிங்­கள பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­களின் தோற்­றத்­தையும் அவற்றின் செயற்­பா­டு­க­ளை

யும் ஊக்­கு­வித்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தின் போக்­கையே நல்­லாட்சி அர­சாங்கம் பின்­பற்­றி­யது. இத்­த­கைய அமைப்­புக்­களின் ஆசீர்­வா­தத்­துடன் பாரம்­ப­ரிய தமிழ்ப் பிர­தே­சங்­களில் சிங்­கள பௌத்த மக்கள் எவரும் இல்­லாத இடங்­களில் புத்தர் சிலைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்தின் துணை­யோடு பௌத்த விகா­ரை­களை அமைக்கும் கைங்­க­ரி­யங்­களும் தாரா­ள­மாக இடம்­பெற்­றன.

இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­களை சிங்­கள மய­மாக்கும் நோக்­கத்­தையும் தமிழர் தாய­கத்தின் இனப்­ப­ரம்பல் நிலை­மையைத் தலை­கீ­ழாக மாற்றி அமைப்­ப­தை­யுமே இலக்­காகக் கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

தமிழ் மக்­களின் அர­சியல்  அபி­லா­சை­களைப்  பிர­தி­ப­லிக்­க­வில்லை

தமிழ்த்­தே­சி­யத்­தையே தங்­களின் அர­சியல் செயற்­பாட்டின் உயிர்­மூச்­சாகக் கொண்­டி­ருப்­ப­தாகப் பெய­ரிலும் பேச்­சுக்­க­ளிலும் வெளிப்­ப­டுத்­து­கின்ற தமிழ் அர­சியல் கட்­சிகள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்­கை­களைக் கண்டும் காணா­தது போன்ற நிலை­மை­யி­லேயே செயற்­பட்­டி­ருந்­தன.

அழுத்தும் பிரச்­சி­னை­க­ளான வலிந்து

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்குப் பொறுப்பு கூறுதல், அர­சியல் கைதி­களின் விடு­தலை, இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணிகள் விடு­விப்பு, படித்த வாலி­பர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு, கிரா­மிய பிர­தேச மட்­டங்­களில் அரச நிதி­யொ­துக்­கீட்டின் கீழான அபி­வி­ருத்தி போன்ற விட­யங்­களில் தமிழ் அர­சியல் கட்­சிகள் தீவிர கவனம் செலுத்­தி­னவே தவிர தோலி­ருக்க சுளையை விழுங்­கு­வதைப் போன்று தமிழ்த்­தே­சி­யத்தின் உயிர் நாடி­யையே அழித்­தொ­ழிக்­கின்ற அரச நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக முறை­யான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை.

காகிதப் புலி­களைப் போன்று அறிக்கை அர­சி­ய­லிலும் ஏனைய தமிழ்க் கட்­சிகள், தமிழ் அர­சியல் அமைப்­புக்­களைச் சாடு­வ­திலும், அவற்றின் குறை­பா­டு­களைக் கடு­மை­யாக விமர்­சனம் செய்­வ­துமே தமிழ் அர­சி­யலின் இலக்­க­ண­மாகத் திகழ்ந்­தது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உரு­வாக்­கத்­துக்கும், அதன் நிலை­பே­றான ஆட்­சிக்கும் உறு­து­ணை­யாக நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, தனது ஆத­ரவு தளத்தைப் பேரம்­பே­சு­வ­தற்­கான ஒரு கள­மாகப் பயன்­ப­டுத்­த­வில்லை. அதற்குத் துணி­ய­வு­மில்லை. குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியின் நலன்­களில் அதீத அக்­கறை கொண்டு செயற்­பட்ட ஒரு போக்­கையே பிர­தி­ப­லித்­தது.

தமிழ் மக்­களின் ஏகோ­பித்த அர­சியல் தலை­மை­யாகத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு விளங்­கிய போதிலும், கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்சி அதன் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் சம அந்­தஸ்தும், சம உரி­மையும் கொண்­ட­தாகச் செயற்­ப­ட­வில்லை. தமி­ழ­ரசுக் கட்­சியின் வளர்ச்­சி­யிலும், மக்கள் மத்­தியில் அதன் செல்­வாக்கை வளர்த்துக் கொள்­வ­தி­லுமே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்­தி­யி­ருந்­தது.

அர­சியல் ரீதி­யாக மிகப் பல­மான எதி­ரா­ளி­யாக விளங்­கிய அரச கட்­சிகள் தமிழ்த்­தே­சி­யத்­துக்கு எதி­ராக மறை­முக நிகழ்ச்­சி­நி­ரலில் முன்­னெ­டுத்த நில, பொரு­ளா­தார, வாழ்­வியல், மத உரித்து, வாழ்­வு­ரிமை என்­ப­வற்றில் நேர் முர­ணான நிலைப்­பா­டுகள் குறித்தும் அவை சார்ந்த நட­வ­டிக்­கைகள் குறித்தும் அர­சாங்­கத்­திடம் அழுத்­த­மான எதிர்ப்­பு­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

பிரச்­சி­னைகள் தொடர்­பாக அர­சாங்­கத்­தி­டமும், நாடா­ளு­மன்­றத்­திலும், வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­டனும் அவ்­வப்­போது பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்­தாலும், அழுத்­த­மான நிலைப்­பா­டா­கவும், அர­சாங்­கத்­துக்கு அர்த்­த­முள்ள வகையில் அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவே இல்லை.

பொறுப்பு கூறும் விட­யத்தில் அர­சாங்­கத்தின் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அழுத்­த­மான வகையில் செல்­வாக்கைப் பிர­யோ­கித்­தி­ருக்க முடியும். ஆனால், இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் வழி­காட்­டலில் அல்­லது அவற்றின் நலன்கள் சார்ந்த நிலையில் அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுப்­பதைத் தவிர்த்தே வந்­துள்­ளது. இது கூட்­ட­மைப்புத் தலை­மையின் தனித்­து­வ­மான அர­சியல் செயற்­பா­டாக அமைந்­ததே தவிர, தமிழ் மக்­களின் நலன்­க­ளுக்­கான செயற்­பா­டாக அமை­ய­வில்லை. அந்த மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கவும் அமை­ய­வில்லை.

தேர்தல் வெற்­றி­யிலும் பார்க்க முக்­கி­ய­மா­னது

பங்­காளிக் கட்­சி­க­ளுடன் சம­நி­லையில் செயற்­ப­டு­வ­தற்குக் கூட்­ட­மைப்பின் தலைமை தவ­றி­ய­தனால், ஏனைய கட்­சி­களை தமி­ழ­ரசுக் கட்­சியின் கட்சி நலன்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­திய போக்கு கார­ண­மா­கவே கூட்­ட­மைப்­புக்குள் முரண்­பா­டு­களும் பிள­வு­களும் தலை­யெ­டுத்­தன.

தேர்­தலில் மக்­களின் வாக்­கு­களைக் கைப்­பற்­று­வ­தற்­கான கூட்டு முயற்­சி­யா­கவே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலைமை தனது பங்­காளிக் கட்­சி­க­ளு­ட­னான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இதுவே அதன் பங்­கா­ளிக்­கட்­சிகள் பிரிந்து சென்று தனி­யாக இயங்­கு­வ­தற்கும் மாற்றுத் தலை­மை­யொன்றை உரு­வாக்­கு­வதற்கு முயற்­சிப்­ப­தற்­கு­மான முக்­கிய கார­ண­மாகும்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் போக்கில் அதி­ருப்­தி­ய­டைந்து, அந்த கூட்­டுக்­குள்­ளி­ருந்து வெளி­யே­றிய கட்­சி­களும், முக்­கி­யஸ்­தர்­களும் புதிது புதி­தாகக் கட்­சி­களை உரு­வாக்­கு­வ­தி­லேயே கண்ணும் கருத்­து­மாக இருந்து செயற்­ப­டு­கின்­றனர். ஏற்­க­னவே களத்தில் செயல் நிலையில் உள்ள கட்­சிகள் ஒன்­றி­ணைந்து பல­முள்­ளதோர் தமிழ் அர­சியல் அமைப்­பாகச் செயற்­பட வேண்டும் என்­பது தமிழ் மக்­களின் விருப்பம். எதிர்­பார்ப்பு.

அத்­த­கை­யதோர் அர­சியல் திரட்­சி­யையே இன்­றைய அர­சியல் சூழலும் தமிழர் தரப்பில் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­து­கின்ற போக்கைப் பிரதிபலித்துள்ளது. கடும்போக்குடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இறுக்கமான – சிறுபான்மையினருக்கு மாறானதோர் அரசியல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழ் அரசியல் பலமுள்ளதோர் அரசியல் அமைப்பாகப் பரிணமித்து அர்த்தமுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேவையை புதிய அரசியல் கட்சிகளை உருவாக்குகின்ற தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கனவே தனித்துச் செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டமைப்புக்கு மாற்றாகப் புதியதோர் அரசியல் அமைப்பாகத் திரட்சி பெறுவதிலும் இதயசுத்தியுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. சிறுபிள்ளைத் தனமான காரணங்களை வெளிப்படுத்தி முரண்பாடுகளை வளர்த்து தமிழ் மக்களுக்குரிய பலமானதோர் அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் பின்தங்கிய செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.

அறிக்கை அரசியலும், தமிழ்த்தரப்புக்குள்ளேயான விமர்சன அரசியலுமே அவர்களின் அரசியல் போக்காகத் திகழ்கின்றது. தமிழ் மக்களுக்கான ஒரு பலமான அரசியல் அமைப்பை அல்லது அரசியலையும் ஏனைய விடயங்களையும் உள்ளடக்கியதானதொரு வலுவான அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் கவனம் சிதறியவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ் அரசியலில் இதனால் காணப்படுகின்ற சிதறிய நெல்லிக்காய் மூட்டை போன்ற அரசியல் நிலைப்பாடும், அரசியல் போக்கும், தமிழ் மக்களின் எதிர்கால நலன்களுக்கு ஒருபோதும் பயன்தரப் போவதில்லை. பாரதூரமான விளைவுகளுக்கே வழிவகுக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அரசியல் விடயமல்ல. சிதறுண்ட அரசியல் போக்கிற்குத் தமிழ் அரசியல் தலைமைகள் முடிவுகட்டி காலத்தின் தேவை கருதி ஒன்றிணைந்து ஓர் அமைப்பாகச் செயற்பட வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். இது வரப்போகின்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அவசியத்திலும்பார்க்க முன்னுரிமையானது. முக்கியமானது.

– பி.மாணிக்­க­வா­சகம்