சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­டமை புனை­யப்­பட்ட கதையாம்!­

“சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு முற்­றிலும் புனை­யப்­பட்­ட­தொரு சம்­ப­வ­ம் என்­பது தற்­போது தெளி­வாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது   என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ இலங்­கைக்­கான சுவிட்­சர்­லாந்து தூதுவர் ஹான்ஸ்­பீட்டர் மொக்­கிடம்  தெரி­வித்தார்.

இலங்­கைக்­கான சுவிட்­சர்­லாந்து தூதுவர் ஹான்ஸ்­பீட்டர் மொக் நேற்று  முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில்   ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக்ஷ வை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.   இதன்­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பி­ட்­டுள்­ளார்.

அண்­மையில் ஜனா­தி­பதி பெற்­றுக்­கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அர­சாங்­கத்தின் சார்­பிலும் வாழ்த்­துக்­களை இதன்­போது  தெரி­வித்த தூதுவர், “நான் அனைத்து இலங்­கை­யர்­க­ளி­னதும் ஜனா­தி­பதி ஆவேன்” என ஜனா­தி­பதி  குறிப்­பிட்­ட­மையை தான் மிகவும் பாராட்­டு­வ­தாகவும் குறிப்­பிட்டார்.

“இலங்­கை­யு­ட­னான தொடர்­புகள் பல­மா­கவும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் பய­னுள்ள வகையில் காணப்­ப­டுதல் தொடர்பில் சுவிட்­சர்­லாந்து மகிழ்ச்­சி­ய­டை­கின்­றது”  என்றும்  அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையில் உள்ள சுவிஸ் தூத­ர­கத்தில் சேவை­யாற்றும் உள்­நாட்டில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட அலு­வலர் ஒரு­வ­ருடன் தொடர்­பு­பட்ட சம்­பவம் குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்த சுவிஸ் தூதுவர், இலங்­கைக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான எந்­த­வொரு நோக்­கமும் சுவிட்­சர்­லாந்து அர­சாங்­கத்­திற்கு இல்லை என வலி­யு­றுத்­தினார்.

“இரு நாடு­களின் நன்­மைக்­கா­கவும் நாம் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். அத்­தோடு இந்த அசௌ­க­ரி­ய­மான நிலை­மை­யி­லி­ருந்து மீண்டு, ஏதேனும் தவ­றான அபிப்­பி­ராயம் காணப்­படின் அதனை நீக்­கிக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்” என சுவிஸ் தூதுவர் குறிப்­பிட்டார்.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி “கடத்­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு முற்­றிலும் புனை­யப்­பட்­ட­தொரு சம்­ப­வ­மாகும் என்­பது தற்­போது தெளி­வாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஊபர் அறிக்­கைகள், தொலை­பேசி உரை­யா­டல்கள் மற்றும் சீசீ­ரிவி காட்­சிகள் போன்ற மறுக்க முடி­யாத ஆதா­ரங்கள் இதனை உறுதி செய்­கின்­றன. எனக்கும் எனது அர­சாங்­கத்­திற்கும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஏதேனும் தரப்­பி­னரின் தேவைக்­காக தூத­ரக அலு­வலர் இவ்­வாறு செயற்­பட்­டி­ருக்­கக்­கூடும். சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அலு­வலர் ஏன் இவ்­வாறு செயற்­பட்டார் என்­பது இன்னும் தெளி­வா­க­வில்லை” என குறித்த விசா­ரணை பற்­றிய முன்­னேற்­றத்­தினை தூது­வ­ருக்கு ஜனா­தி­பதி தெளி­வு­ப­டுத்­தினார்.

சுவிட்­சர்­லாந்து தூத­ரகம் செயற்­பட்ட விதம் தொடர்பில் தான் எவ்­வித தவ­றையும் அவ­தா­னிக்­க­வில்லை என ஜனா­தி­பதி  தெரி­வித்­த­தோடு, அச்­செ­யற்­பாடு நியா­ய­மா­ன­தாகும் என்றும் தமது அலு­வ­ல­கத்தில் பணி­பு­ரியும் உறுப்பினர் ஒருவர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் போது தூதரகம் அதில் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகும். என்று ம் குறிப்பிட்டார்.

மேலும்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுவிஸ் தூதுவரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி   இதனூ டாகவே உண்மை வெளிப்படும் எனவும் தெரிவித்தார்.