வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா!

கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாக இடர் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையின் காரணமாக நேற்று மாலை வரையில் நாடு முழுவதும் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்கட்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இவர்களுக்கான நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.