2020 உலகின் திருமணமான அழகியாக சிறிலங்கா பெண் தெரிவு!

2020 ஆம் ஆண்டின்  “மிஸிஸ் வேர்ல்ட்” – “உலக அழகுத் திருமதி”  என்ற பட்டத்தை சுவீகரித்தார் சிறிலங்காவைச் சேர்ந்த கரோலின் ஜூரி.

அமெரிக்காவில் லொஸ்வேகொஸில் இடம்பெற்ற தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர் . இதில்  பங்குபற்றிய கேரோலின் குறித்த விருதை பெற்றுள்ளார்.

ஏற்கெனவே அவர் “ மிஸிஸ் ஸ்ரீ லங்கா” என்ற விருதுக்கும் சொந்தக்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்.

35 ஆண்டுகளுக்கு பிறகு “மிஸிஸ் வேர்ல்ட்” – “உலக அழகுத் திருமதி”  சிறிலங்கா  பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த விருதை முதலாவது தடவையாக 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.