தடையை மீறி யாழ் பல்கலையில் எழுச்சியுடன் நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறி சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறிச் சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முன்னெடுத்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் மாணவர்கள் உள்நுழைவதற்கும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியால் நேற்று (26) தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.