மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தாயகம் தயார் நிலையில்!

மாவீரர் நினைவு வாரம் ஆரம்­பித்­துள்ள நிலையில் வடக்கில் உணர்­வு­பூர்­வ­மாக அதனை அனுஷ்­டிப்­ப­தற்­காக மாவீரர் துயி லும் இல்­லங்கள் தயா­ரா­கி­யுள்­ளன.

 

2009 ஆம் யுத்தம்  மௌனிக்­கப்­பட்ட பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்­க­ளினால் மாவீரர் தினம் உணர்­வு­பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அந்த வகையில் வடக்­கி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லங்­களில் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு  பொதுச்­சுடர் ஏற்றி மாவீ­ரர்­களை நினை­வு­கூர மக்கள் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர்.

மாவீ­ரர்நாள் நினை­வேந்தல் குழு­வினர், பொது மக்கள் மற்றும் அர­சியல் கட்­சி­யினர்  வடக்­கி­லுள்ள துயி­லு­மில்­லங்­களைப் பொறுப்­பேற்று சிர­ம­தா­னப்­ப­ணி­களை மேற் ­கொண்டு வரு­கின்­றன.

குறிப்­பாக யாழ்.மாவட்­டத்தில் கோப்பாய் மாவீரர் துயி­லு­மில்லம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டி­லுள்­ள­மை­யினால் அதற்கு முன்­பா­க­வுள்ள காணியை தமிழ்­தே­சிய மக்கள் முன்­ன­ணி­யினர் பொறுப்­பேற்று நினைவு தினத்­திற்­கான ஏற்­பா­டுகள் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதே­போன்று பூந­கரி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய இடங்­க­ளி­லுள்­ள­ மா­வீரர் துயிலும் இல்­லங்­களை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மற்றும் பொது மக்கள் பொறுப்­பேற்று நிகழ்­வுக்­கான  ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.