1,500 ஏழைகளுடன் இணைந்து உணவருந்திய பாப்பரசர்!

பாப்­ப­ரசர் பிரான் சிஸ்  தலை­மையில் வத்­திக்­கானில் சுமார் 1,500 வறிய  மற்றும் வீடு­வா­ச­லற்ற மக்­க­ளுக்கு  உணவு அளிக்கும் நிகழ்வு  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  இடம்­பெற்­றுள்­ளது.

உலக வறியோர் தினத்­தை­யொட்­டியே மேற்­படி உண­வ­ளிக்கும் நிகழ்­விற்கு ஏற்­பாடு செய்­யப்­ப­ட்­டி­ருந்­தது.

இந்த உண­வ­ளிக்கும் நிகழ்­விற்கு முன்னர்  வத்­திக்­கா­னி­லுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் உரை­யாற்­றிய பாப்­ப­ரசர்,  சமூ­கத்தில் காணப்­படும் வேறு­பா­டு­களே வறு­மைக்குக் காரணம் எனத் தெரி­வித்தார்.

எத்­தனை; வயோ­தி­பர்கள், பிறக்­காத குழந்­தைகள்,  விசேட தேவை­யுள்­ள­வர்கள் மற்றும் வறிய மக்கள் ஆகியோர் பய­னற்ற­வர்­க­ளாக கரு­தப்­பட்டு வரு­கின்­றனர். நாம் நம்­மி­டை­யே­யான இடைவெளி அதி­க­ரிப்­பது குறித்துக் கவ­லை­யின்றி எமது வழியில் விரைந்து சென்­ற­ுகொண்­டி­ருக்­கிறோம்.  ஒரு சிலரின் பேரா­சையால் பலர் வறு­மையில் வாடு­கின்­றனர்” என பாப்­ப­ரசர் தெரி­வித்தார்.

ஆறாம் போல் மண்­ட­பத்தில் இடம்­பெற்ற மேற்­படி உணவளிக்கும் நிகழ்வின்போது   பாப்­ப­ரசர் அங்கிருந்திய 1,500 பேருடனும் அமர்ந்து உணவருந்தினார்.