17ம் திகதி அதிகாலை முதலாவது முடிவு வெளியாகும்!

நாளைய தினம் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை நாளை (16) நள்ளிரவிற்கு முன்னதாக வழங்க முடியும் எனவும் பெரும்பாலும் அது இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவாக இருக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தொகுதிவாரியான முடிவுகளின் முதலாவது முடிவை (17) அதிகாலை 2 மணிக்காவது வழங்க முடியும் என்றும் காலை 8 மணியாகும்போது அரைவாசிக்கும் மேல் முடிவுகளை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.