கோத்­தாப­யவை தமிழ் மக்கள் ஒரு­போதும் ஏற்கமாட்­டார்கள்!

கோத்­த­பாய ராஜபக்ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த காலத்­தி­லேயே தமிழ் மக்கள் அதி­க­மாக துன்­பு­றுத்­தப்­பட்­டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்தத் திட்­டங்­க­ளையும் அவர்கள் முன்­வைக்­க­வில்லை.

இந்நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்­சினை ஒன்று இருப்­ப­தாகக் கூட அவர் ஏற்­று­க்கொள்­ள­வில்லை. மாறாக சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் வெற்றி பெற்றுக்காட்­டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆத­ரிக்க முடி­யாது என்று  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் தற்­போது அதிகம் விமர்­சிக்­கப்­படும் வெள்­ளை வேன் விவ­காரம் உள்­ளிட்ட சில விட­யங்கள் குறித்து கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.எ.சுமந்­திரன் இத னைக் கூறினார்.

அவர் இது தொடர்பில்  மேலும் கூறு­கையில்,

மஹிந்த ராஜபக் ஷ  2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்ற பின் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நேர­டி­யாக இறக்­கு­மதி செய்­யப்­பட்­டவர் தான் கோத்­த­பாய ராஜ­பக்ச.

அவர் பாது­காப்புச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­படும் போது இலங்கை பிரஜை கூட இல்லை. தான் ஒரு இலங்கைப் பிரஜை என்று ஒரு ஆவ­ணத்தை சமர்ப்­பித்­தி­ருக்­கிறார்.   தொடர்ந்து இரட்டை பிர­ஜை­யாக இருந்து வந்த கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு ஜனா­தி­பதி ஆசை வந்த பின் அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை துறப்­ப­தாக ஆவணம் ஒன்றை காட்­டினார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர்  மூன்­றா­வது காலாண்­டுக்கு உரிய அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரி­மையை துறந்­த­வர்­க­ளுக்­கான பெயர் பட்­டியல் வெளி­வந்­துள்­ளது. இதிலும் கோத்­தபாயவின் பெயர் இடம்­பெ­ற­வில்லை. இப்­போது பிர­தா­ன­மாக இரண்டு கேள்­விகள் எம்­மத்­தியில் எழு­கின்­றன. அதா­வது கோத்­த­பாய ராஜபக்ஷ  இலங்கை பிர­ஜா­ வு­ரி­மையை சரி­யாகப் பெற்­றுக்­கொண்­டாரா? அதேபோல் அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரி­மையை அவர் உண்­மை­யி­லேயே துறந்­தாரா? இந்தக் கேள்­வி­க­ளுக்கு விடை தேட வேண்­டி­யுள்­ளது.

கோத்­த­பாய ராஜபக்ஷ பாது­காப்புச் செய­ லா­ள­ராக இருந்த கால­கட்­டத்தில் தான் போர் உச்­ச­கட்­டத்தில் இடம்­பெற்­றது. இந்த யுத்த வெற்றி தன்­னு­டை­யது என கோத்­தபாய சார்பில் புத்­த­கமே எழு­தப்­பட்­டுள்­ளது. “தி கோட்டாஸ் வோர்” என்ற புத்­த­கத்தை எழுதி யுத்த வெற்­றியை தன­தாக்­கிக்­கொண்­டுள்ளார்.

இதுநாள் வரையில் யுத்த வெற்றி  தனக்கு கிடைத்த புகழ் என்று மார்­தட்­டி­யவர் சர­ண­டைந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் எங்கே என ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு ஏன் என்­னிடம் கேட்­கி­றீர்கள், இரா­ணுவத் தள­ப­தி­யிடம் கேளுங்கள் என்று சொல்­லி­யி­ருக்­கிறார். சர­ண­டைந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் எங்கே என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்க முடி­யாமல் திண­றி­யதை நாம் பார்த்தோம். போர் காலத்தில் இவ்­வா­றான அட்­டூ­ழி­யங்கள் நடந்­தன என்­பது எங்­க­ளுக்கு தெரியும். என்ன வித­மாக போரை வழி நடத்­தி­னார்கள் என்­பதை எங்­க­ளது மக்கள்  நன்­க­றி­வார்கள்.

போர் முடிந்த பின்பு என்­ன­வி­த­மான அடக்கு முறை­களை கையாண்­டார்கள், ஊடக சுதந்­தி­ரத்தை எவ்­வாறு மழுங்­க­டித்­தார்கள் தனக்­கெ­தி­ராக யாரா­வது ஒரு வார்த்தை சொல்­லி­விட்டால் அவரை என்ன வித­மாக கவ­னித்துக் கொண்­டார்கள் என்­பது தெரிந்த விடயம்.

இந்த முறை அவை தொடர்­பான விட­யங்கள் கூடு­த­லாக வெளி­வ­ரு­கின்­றன. வெள்ளை வான் கடத்தல் என்­பது ஒரு சொற்­ப­த­மா­கவே மாறி இருக்­கி­றது. இன்று இலங்­கையில் ஊட­கங்­களில் அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்கும் விட­ய­மாக வெள்ளை வேன் கடத்தல் விவ­காரம் மாறி­யுள்­ளது.  அந்த அள­விற்கு வெள்ளை வான் விடயம் பிர­ப­ல­மா­கி­யுள்­ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இவ்­வாறு காணாமல் போன­வர்கள், கடத்­தப்­பட்­ட­வர்கள் ஏரா­ள­மாகும்.  உல­கத்­திலே அவை பேசும் பொரு­ளா­கவே உள்­ளன. ஆங்­கி­லத்தில் வெள்ளை வேன் கடத்தல் என்­பது ஒரு சொற்­ப­த­மா­கவே ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த அள­விற்கு வெள்ளை வான் விடயம் பிர­ப­ல­மா­கி­யுள்­ளது. கோத்­த­பாய ராஜ­பக் ஷ பாது­காப்புச் செய­லா­ள­ ராக இருந்த காலத்­தில்தான் காணி அப­க­ரிப்பு, இளை­ஞர்கள் துன்­பு­றுத்­தப்­பட்­டமை குறித்து ஓர் ஆவணம் இருக்­கி­றது. தமிழ் மக்கள் குறித்து கோத்­த­பாய ராஜ­பக்ச தேர்தல் வரைபில் எதுவும் குறிப்­பி­ட­வில்லை.

இந்த நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்­சினை ஒன்று இருப்­ப­தாகக்கூட அவர் காட்­டிக்­கொள்­ள­வில்லை. அதற்கு ஒரு படி மேலாக சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் வெற்றி பெற்று காட்டுவேன் எனக் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு முடிந்தால் வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என சவால் விடுத்து இருக்கிறார்.

தமிழ்த் தேசியம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நிதானித்து கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க முடியாது என முடிவைச் சொல்லி இருக் கிறது என தெரிவித்துள்ளார்.