14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

14 பிரதிநிதிகளை அடங்கிய இக் குழுவில் ஆறு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மூன்று இந்தியர்கள், மூன்று இந்தோனேஷியர்கள், இரண்டு தென்னாபிரிக்கர்கள், இரண்டு பூட்டானியர்கள், இரண்டு பங்களாதேஷியர்கள் மற்றும் இரண்டு மாலைத்தீவினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஒரு குழுவினர் நாளை இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.