மிதவைப் படகில் அலைக்கழிந்த நியூ­ஸி­லாந் பெண்!

மிதவைப் பட­கொன்றில்  கடலில்  சுமார்  இரு நாட்­க­ளாக அலைக்­க­ழிந்த  பெண் சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர்  இனிப்­பு­களை உண்டு உயிர்­பி­ழைத்­தி­ருந்த நிலையில்  மீட்­கப்­பட்­டுள்ளார்.

நியூ­ஸி­லாந்தைச் சேர்ந்த குஷிலா ஸ்டெயின் என்ற 45 வயதுப் பெண்ணே கிரேக்கத் தீவான கிரெட்­டிற்கு அப்பால் ஏஜியன் கடலில் அலைக்­க­ழிந்து கொண்­டி­ருந்த பட­கி­லி­ருந்து  37 மணி நேரம் கழித்து மீட்­கப்­பட்­டுள்ளார்.

அவர் இதன்­போது தன்­னி­ட­மி­ருந்த லொலி என அழைக்­கப்­படும் வேக­வைத்த இனிப்பு தின்­பண்­டங்­களை உண்டும்   கடும் குளிரைத் தாங்­கிக்­கொள்­வ­தற்கு பிளாஸ்­டிக் விரிப்பால் உடலைப்  போர்த்­தி­யி­ருந்தும் உயிர் பிழைத்­தி­ருந்­துள்ளார்.

இந்­நி­லையில் தன்னை மீட்புப் பணி­யா­ளர்கள் இல­கு­வாக அடை­யாளம் கண்­டு ­கொள்ள வச­தி­யாக அவர் தனது  தலையைச் சுற்றி சிவப்பு நிற பையொன்றை கட்­டி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கப்­பலைச் செலுத்­து­வதில் அனு­பவம் பெற்­ற­வ­ரான குஷிலா, மைக் என அழைக்­கப்­படும் பிரித்­தா­னி­ய­ருக்கு தென் துருக்­கி­யி­லி­ருந்து கிரேக்க ஏதென்ஸ் நக­ருக்கு  சொகுசு கப்­ப­லொன்றை செலுத்த உத­விய பின்னர் மித­வையில் கிரேக்கத் தீவான பொல­கன்­ட்­ரொ­ஸிற்கு பய­ணிக்க முயற்­சித்த வேளையில் கடும் காற்றுக் கார­ண­மாக அவரால் எடுத்து வரப்­பட்ட துடுப்­புகள் கடலில் விழுந்­த­மையால் அவர் பயணி­த்த மிதவைப் படகு கடல் அலையால் அடித்துச் செல்­லப்­பட்டு அவர் கடலில் திக்குத் தெரி­யாது அலைக்­க­ழிய நேரிட்­டுள்­ளது

தான் உயிர்­பி­ழைப்­பது சாத்­தி­ய­மற்­றது என அஞ்­சிய குஷிலா தனது தாயாரின் பெய­ரையும் அவரைத் தொடர்பு கொள்­வ­தற்­கான விப­ரங்­க­ளையும் தனது மித­வையின் ஒரு பக்­கத்தில் எழுதி வைத்­துள்ளார்.

அவரைத் தேடும் நட­வ­டிக்­கையில் 6 கப்­பல்கள் மற்றும் பட­கு­களும் உலங்­கு­வா­னூர்­தி­யொன்றும் கட­லுக்கு கீழாக பய­ணிக்கும்  ஆளற்ற  நீர்­மூழ்கி உப­க­ர­ண­மொன்றும்  ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவர் கிரெட் தீவின் வடக்கே 101 கிலோமீற்றர்  தொலைவில் கிரேக்க கரையோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.