2 ஆவது உலகப்போரின்போது யூத குடும்பத்தை காப்பாற்றிய கிரேக்க பெண்!

கிரேக்­கத்தைச் சேர்ந்த 92 வயது பெண்­ணொ­ருவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில்  நாஸி­க­ளி­ட­மி­ருந்து தன்னால் காப்­பாற்­றப்­பட்ட இரு யூத உடன்­பி­றப்­பு­களை  முதல் தட­வை­யாக  7 தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் கழித்து சந்­தித்த  நெஞ்சை நெகிழ வைக்கும் சம்­பவம் ஜெரு­ச­லே­மி­லுள்ள  இன அழிப்பு ஞாப­கார்த்த அருங்­காட்­சி­ய­கத்தில்  இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது குறிப்­பிட்ட கிரேக்கப் பெண்ணும் அவரால் காப்­பாற்­றப்­பட்ட உடன்­பி­றப்­பு­களும்  உணர்­வு­மே­லீட்டால் கண்ணீர் சிந்தி அழு­தனர்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் இள­வ­ய­தி­ன­ராக இருந்த மெல்­பொ­மெனி தினா என்ற மேற்­படி கிரேக்கப் பெண் குறிப்­பிட்ட யூத குடும்­பத்தைச் சேர்ந்த  6 உறுப்­பி­னர்­களை  தனக்­கி­ருந்த உயி­ரா­பத்­தையும் பொருட்­ப­டுத்­தாது  தனது வீட்டில் மறைத்து வைத்­தி­ருந்து அவர்கள் தப்பிச் செல்­வ­தற்கு உத­வி­யுள்ளார்.

அந்தக் குடும்­பத்தை தமது இருப்­பி­டத்தில் மறைத்து வைத்­தி­ருந்த காலத்தில் தினாவும் அவ­ரது சகோ­த­ரிகள் இரு­வரும்    தமக்கு கிடைத்த சொற்ப உணவை  மேற்­படி யூத குடும்­பத்­தி­ன­ருடன் பகிர்ந்து உண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் அவரால் காப்­பாற்­றப்­பட்­ட­வர்­களில் தற்­போதும் உயி­ருடன் இருக்கும்  சாரா யனே­யியும் யொஸி மோரும்  யூத  உரி­மைகள் மன்­றத்தின் உத­வி­யுடன் வாட் யஷிம் இன அழிப்பு ஞாப­கார்த்த அருங்­காட்­சி­ய­கத்தில்  தம்மைக் காப்­பாற்­றிய தினா­வுடன் சந்­திப்பை மேற்­கொண்­டனர். இதன்­போது அவர்கள் தமது 20 பிள்­ளை­க­ளையும்  பேரப்­பிள்­ளை­க­ளையும் அங்கு அழைத்து வந்து தினாவால் காப்­பாற்­றப்­பட்ட தமது குடும்பம் எவ்­வாறு ஆல விருட்­ச­மாக  பரந்து விரிந்­துள்­ளது என்­பதை அவ­ருக்கு காண்­பித்து அவரை மகிழ்ச்சிப் பெரு­மி­தத்தில் ஆழ்த்­தினர்.

 

 

 

சர்­வா­தி­காரி  ஹிட்­லரின் ஆட்­சியின் கீழி­ருந்த  நாஸி ஜேர்­ம­னி­யா­னது 1941ஆம் ஆண்­டுக்கும் 1944 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில்  கிரேக்கத்தை ஆக்கிரமித்திருந்தது. இதன்போது  நாஸிகளால்  80,000 க்கும் மேற்பட்ட கிரேக்க யூதர்கள் கொல்லப்பட்டனர்.